Friday, September 05, 2014
தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முடிவடைந்தது. வேட்பு மனுக்கள் இன்று (வெள் ளிக் கிழமை) பரி சீலனை செய்யப்பட உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள வார்டு கவுன் சிலர்கள், தலைவர்கள் போன்ற பணியிடங்களுக்கான இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) நடை பெற உள்ளது. தேனி மாவட் டத்தில் தேனி அல்லிநகரம் நகராட்சி 26-வது வார்டு மற்றும் 33-வது வார்டு, சின்ன மனூர் ஊராட்சி ஒன்றியம் 3-வது வார்டு, மார்க்கையன் கேட்டை பேரூராட்சி 12-வது வார்டு, காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி 3-வது வார்டு, 6-வது வார்டு, உத்தமபாளையம் பேரூராட்சி 1-வது வார்டு, வடுகப்பட்டி பேரூராட்சி 5-வது வார்டு ஆகிய பதவிகள் காலியாக உள்ளன.
மேலும் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட் பட்ட சித்தார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவியும், கிராம ஊராட்சிகளில் மொத் தம் 20 வார்டுகளின் உறுப் பினர் கள் பதவியும் காலியாக உள்ளது. உள்ளாட்சி அமைப்பு களில் மொத்தம் 30 பதவிகள் காலியாக உள்ளன.
இதற்காக வேட்பு மனு தாக் கல் கடந்த 28-ந்தேதி தொடங் கியது. வேட்பு மனு தாக்கலுக்கு நேற்று கடை நாள் ஆகும். கடைசி நாளில் பா.ஜ.க. வேட் பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தேனி அல்லிநகரம் நகராட்சியில் 26-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிச்சைமணி (வயது 42) என்பவர் நேற்று மனு தாக்கல் செய்தார். அப்போது தேனி நகர பாரதிய ஜனதா கட்சி தலைவர் கும ரேசன், தேனி நகர தே.மு.தி.க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். 33-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இறுதி நாளான நேற்று யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. சின்னமனூர் ஒன்றியம் 3-வது வார்டு இடைத்தேர்தலுக்கு அ,திமு.க சார்பில் ராமையா மனு தாக்கல் செய்தார். அப்போது ஒன்றிய செயலாளர் முத்து சாமி, ஒன்றிய குழுதலைவர் பாண்டியராஜன், பேரூர் செயலாளர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சித்தார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அதே கிராமத்தை சேர்ந்த மனோரஞ்சிதம், தன சேகரன், ரமேஷ், நந்தராஜ் ஆகியோர் மனுதாக்கல் செய் தனர். இந்த ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மொத்தம் 5 மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டு உள்ளன.
வேட்பு மனு தாக்கல் நேற்று பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்தது. இதுவரையில் தேனி அல்லிநகரம் நகராட்சி 26-வது வார்டு மற்றும் 30-வது வார்டுக்கு தலா 3 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். பேரூ ராட்சிகளில் மார்க்கையன் கோட்டை 12-வது வார்டுக்கு 2 பேர், காமயகவுண்டன்பட்டி 6-வது வார்டுக்கு 5 மனுக்கள், 3-வது வார்டுக்கு 4 மனுக்கள், உத்தமபாளையம் 1-வது வார்டுக்கு 2 மனுக்கள், வடுகப் பட்டி 5-வது வார்டுக்கு 6 மனுக்கள் என நகர் பகுதி களுக்கு மொத்தம் 25 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள் ளன.
ஊரக பகுதிகளை பொறுத்தவரை சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம் 3-வது வார்டுக்கு 2 மனுக்கள், சித்தார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 5 மனுக்கள், கிராம ஊராட்சி வார்டுகளில் காலியாக உள்ள 20 பதவி களுக்கு 52 மனுக்கள் என புறநகர் பகுதிகளுக்கு மொத்தம் 59 மனுக்கள் தாக் கல் செய்யப்பட்டு உள்ளன.
மனுக்கள் மீது இன்று (வெள்ளிக்கிழமை) பரிசீலனை செய்யப்பட உள்ளது. மனுக் களை வாபஸ் பெற 8-ந்தேதி (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். வாக்குப்பதிவு 18-ந் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 22-ந்தேதி நடை பெற உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள வார்டு கவுன் சிலர்கள், தலைவர்கள் போன்ற பணியிடங்களுக்கான இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) நடை பெற உள்ளது. தேனி மாவட் டத்தில் தேனி அல்லிநகரம் நகராட்சி 26-வது வார்டு மற்றும் 33-வது வார்டு, சின்ன மனூர் ஊராட்சி ஒன்றியம் 3-வது வார்டு, மார்க்கையன் கேட்டை பேரூராட்சி 12-வது வார்டு, காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி 3-வது வார்டு, 6-வது வார்டு, உத்தமபாளையம் பேரூராட்சி 1-வது வார்டு, வடுகப்பட்டி பேரூராட்சி 5-வது வார்டு ஆகிய பதவிகள் காலியாக உள்ளன.
மேலும் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட் பட்ட சித்தார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவியும், கிராம ஊராட்சிகளில் மொத் தம் 20 வார்டுகளின் உறுப் பினர் கள் பதவியும் காலியாக உள்ளது. உள்ளாட்சி அமைப்பு களில் மொத்தம் 30 பதவிகள் காலியாக உள்ளன.
இதற்காக வேட்பு மனு தாக் கல் கடந்த 28-ந்தேதி தொடங் கியது. வேட்பு மனு தாக்கலுக்கு நேற்று கடை நாள் ஆகும். கடைசி நாளில் பா.ஜ.க. வேட் பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தேனி அல்லிநகரம் நகராட்சியில் 26-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிச்சைமணி (வயது 42) என்பவர் நேற்று மனு தாக்கல் செய்தார். அப்போது தேனி நகர பாரதிய ஜனதா கட்சி தலைவர் கும ரேசன், தேனி நகர தே.மு.தி.க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். 33-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இறுதி நாளான நேற்று யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. சின்னமனூர் ஒன்றியம் 3-வது வார்டு இடைத்தேர்தலுக்கு அ,திமு.க சார்பில் ராமையா மனு தாக்கல் செய்தார். அப்போது ஒன்றிய செயலாளர் முத்து சாமி, ஒன்றிய குழுதலைவர் பாண்டியராஜன், பேரூர் செயலாளர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சித்தார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அதே கிராமத்தை சேர்ந்த மனோரஞ்சிதம், தன சேகரன், ரமேஷ், நந்தராஜ் ஆகியோர் மனுதாக்கல் செய் தனர். இந்த ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மொத்தம் 5 மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டு உள்ளன.
வேட்பு மனு தாக்கல் நேற்று பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்தது. இதுவரையில் தேனி அல்லிநகரம் நகராட்சி 26-வது வார்டு மற்றும் 30-வது வார்டுக்கு தலா 3 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். பேரூ ராட்சிகளில் மார்க்கையன் கோட்டை 12-வது வார்டுக்கு 2 பேர், காமயகவுண்டன்பட்டி 6-வது வார்டுக்கு 5 மனுக்கள், 3-வது வார்டுக்கு 4 மனுக்கள், உத்தமபாளையம் 1-வது வார்டுக்கு 2 மனுக்கள், வடுகப் பட்டி 5-வது வார்டுக்கு 6 மனுக்கள் என நகர் பகுதி களுக்கு மொத்தம் 25 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள் ளன.
ஊரக பகுதிகளை பொறுத்தவரை சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம் 3-வது வார்டுக்கு 2 மனுக்கள், சித்தார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 5 மனுக்கள், கிராம ஊராட்சி வார்டுகளில் காலியாக உள்ள 20 பதவி களுக்கு 52 மனுக்கள் என புறநகர் பகுதிகளுக்கு மொத்தம் 59 மனுக்கள் தாக் கல் செய்யப்பட்டு உள்ளன.
மனுக்கள் மீது இன்று (வெள்ளிக்கிழமை) பரிசீலனை செய்யப்பட உள்ளது. மனுக் களை வாபஸ் பெற 8-ந்தேதி (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். வாக்குப்பதிவு 18-ந் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 22-ந்தேதி நடை பெற உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment