Friday, September 12, 2014

உடுமலை அருகே பிஏபி வாய்க்கால் ஷட்டரில் இருந்து 3 வயது குழந்தையின் சடலம் வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டது.
உடுமலையை அடுத்துள்ள போடிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் யோகேந்திரா (3). புதன்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த யோகேந்திரா, திடீரென காணாமல் போனதையடுத்து, அவரின் பெற்றோர்கள் அந்தப் பகுதி முழுவதும் தேடியுள்ளனர். பின்னர் இது குறித்து அவரது தந்தை முருகேசன் உடுமலை போலீஸில் புகார் அளித்தார்.
இது குறித்து போலீஸார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த நிலையில், தாந்தோணி கிராமம் அருகில் உள்ள சின்னப்புத்தூர் பிஏபி வாய்க்கால் ஷட்டரில் ஒரு குழந்தையின் சடலம் வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ஷட்டரில் மீட்கப்பட்ட குழந்தை யோகேந்திரா என்பது தெரிய வந்தது. யோகேந்திரா, விளையாடிக் கொண்டிருக்கும் போது, தனது வீட்டின் அருகே உள்ள பிஏபி வாய்க்காலில் தவறி விழுந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
யோகேந்திராவின் சடலம் உடுமலை அரசு மருத்துமனைக்கு கொண்டு வரப்பட்டது. உடுமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பில் புகைபழக்கத்திற்கு எதிராய் பிரசார சீட்டு வழங்கி வடச்சென்னையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
சென்னை, செப். 29– சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயிலும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. கோர்ட்டு தீர்ப்பையடு...
0 comments:
Post a Comment