Friday, September 12, 2014

உடுமலை அருகே பிஏபி வாய்க்கால் ஷட்டரில் இருந்து 3 வயது குழந்தையின் சடலம் வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டது.
உடுமலையை அடுத்துள்ள போடிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் யோகேந்திரா (3). புதன்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த யோகேந்திரா, திடீரென காணாமல் போனதையடுத்து, அவரின் பெற்றோர்கள் அந்தப் பகுதி முழுவதும் தேடியுள்ளனர். பின்னர் இது குறித்து அவரது தந்தை முருகேசன் உடுமலை போலீஸில் புகார் அளித்தார்.
இது குறித்து போலீஸார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த நிலையில், தாந்தோணி கிராமம் அருகில் உள்ள சின்னப்புத்தூர் பிஏபி வாய்க்கால் ஷட்டரில் ஒரு குழந்தையின் சடலம் வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ஷட்டரில் மீட்கப்பட்ட குழந்தை யோகேந்திரா என்பது தெரிய வந்தது. யோகேந்திரா, விளையாடிக் கொண்டிருக்கும் போது, தனது வீட்டின் அருகே உள்ள பிஏபி வாய்க்காலில் தவறி விழுந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
யோகேந்திராவின் சடலம் உடுமலை அரசு மருத்துமனைக்கு கொண்டு வரப்பட்டது. உடுமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
தாராபுரம் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் விண்ணப்பங்கள் கடந்த 10–ந் தேதி வரை அந்தந்த வாக்குச்சாவடிகளில் பெறப்பட்டன. அப்போத...
0 comments:
Post a Comment