Friday, September 12, 2014

உடுமலை அருகே பிஏபி வாய்க்கால் ஷட்டரில் இருந்து 3 வயது குழந்தையின் சடலம் வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டது.
உடுமலையை அடுத்துள்ள போடிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் யோகேந்திரா (3). புதன்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த யோகேந்திரா, திடீரென காணாமல் போனதையடுத்து, அவரின் பெற்றோர்கள் அந்தப் பகுதி முழுவதும் தேடியுள்ளனர். பின்னர் இது குறித்து அவரது தந்தை முருகேசன் உடுமலை போலீஸில் புகார் அளித்தார்.
இது குறித்து போலீஸார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த நிலையில், தாந்தோணி கிராமம் அருகில் உள்ள சின்னப்புத்தூர் பிஏபி வாய்க்கால் ஷட்டரில் ஒரு குழந்தையின் சடலம் வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ஷட்டரில் மீட்கப்பட்ட குழந்தை யோகேந்திரா என்பது தெரிய வந்தது. யோகேந்திரா, விளையாடிக் கொண்டிருக்கும் போது, தனது வீட்டின் அருகே உள்ள பிஏபி வாய்க்காலில் தவறி விழுந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
யோகேந்திராவின் சடலம் உடுமலை அரசு மருத்துமனைக்கு கொண்டு வரப்பட்டது. உடுமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கோவை மாநகராட்சி 87–து வார்டுக்குட்பட்ட குனியமுத்தூர் பகுதியிலுள்ள குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில் குனியமுத்தூர் வசந்தம் நகர் ...
-
நபார்டு வங்கியின் கடன் இலக்கு... ரூ.2,745 கோடி = கரூர் மாவட்ட கலெக்டர் த கவல் ...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி 17.4.16 திமுக கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற வேட்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கூட்டம்திருச்சி சத்த் p ரம் பேரு...
-
திருச்சி-24.03.19 தேமுதிக திருச்சி பாராளுமன்ற தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக வின் திருச்சி...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையானதை ஒட்டி மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.வ...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
கோவை, செப்.13– தமிழக பா.ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் க...
0 comments:
Post a Comment