Wednesday, September 24, 2014
திருப்பூர் மாநகராட்சியின் 48–வது வார்டு உறுப்பினராக மக்களால் தேர்வு செய்யப்பட்ட திருப்பூர் மாநகர மகளிரணி செயலாளர் கீதாஆறுமுகம் (அ.தி.மு.க.) கடந்த 2 ஆண்டு காலத்தில் பகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுத்துள்ளார். மக்களின் பிரச்சினைகளுக்காக காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் தமிழக முதல்–அமைச்சரின் மீது மிகுந்த பற்றும், கட்சியின் மீது இவர் வைத்திருந்த மரியாதையும் மக்களுக்கு செய்யும் சேவையால் இவர் 48–வது வார்டு கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார்.
மக்களுக்காக உழைப்பதே தனது கடமை என்று எண்ணி உழைத்து மக்களிடம் நன்மதிப்பை பெற்ற கீதா ஆறுமுகம் கூறியதாவது:–
எனது 48–வது வார்டுக்குட்பட்ட பகுதியில் தார் சாலைகள், போர்வெல் தண்ணீர் டேங்க், குடிநீர் குழாய், குடிசை மேம்பாட்டு திட்டத்தில் தெருவிளக்குகள், சோடியம் மற்றும் டியூப் லைட்டுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 48–வது வார்டு மக்களின் அத்தியாவசிய தேவைகளை முன்னின்று செய்து கொடுத்து வருகிறேன். நான் பெண் கவுன்சிலராக இருப்பதால் 48–வது வார்டில் உள்ள பெண்கள் தங்கள் குறைகளை எளிதில் என்னை அணுகி தங்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்கிறார்கள். மேலும் முதல்–அமைச்சர் திருப்பூர் மாநகராட்சிக்கு அதிகமான நிதி உதவி வழங்கி வருகிறார்கள். முதல்–அமைச்சரின் ஆசியால் பொதுமக்களுக்கு அனைத்து அடிப்படை தேவைகளையும் செய்து கொடுக்க முயற்சி செய்வேன். அனைவருக்கும் இனிய ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment