Tuesday, September 02, 2014
தாம்பரம் அருகே லாரியை மடக்கி ரூ. 6 கோடி மதிப்புள்ள மருந்து மூலப் பொருள்களை கடத்திச் சென்றதாக சென்னை ஆயுதப்படை காவலர் உள்பட 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை சிப்காட்டில் மருந்து மூலப் பொருள்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனம் சர்க்கரை ஆலை கழிவுப் பொருளான மொலாசஸில் இருந்து "எபிட்ரின்' என்ற ஆஸ்துமா உள்ளிட்ட சில நோய்களுக்கு மருந்து தயாரிக்கும் மூலப்பொருளைத் தயாரித்து சுவிட்சர்லாந்து, இராக் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
இந்த நிலையில், ஆகஸ்ட் 27-ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு 3 லாரிகளில் தலா 1,000 கிலோ மதிப்புள்ள எபிட்ரின் மருந்து மூலப்பொருள்கள் ஏற்றுமதி செய்ய சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து வல்லக்கோட்டை சந்திப்பு வழியாக தாம்பரம் நோக்கி அந்த லாரிகள் சென்றன.
2 லாரிகள் சென்றுவிட்ட நிலையில், கடைசியாக வந்த லாரியை மலைப்பட்டு கிராமத்தில் இரவு 12.30 மணிக்கு கார்களில் வந்த மர்ம நபர்கள் மடக்கினர்.
லாரியை, மோசூர்பாளையத்தைச் சேர்ந்த தினேஷ் (26) ஓட்டி வந்தார். அதில் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு அதிகாரியாக கண்ணபிரான் (52) உடன் வந்தார்.
லாரியை வலுக்கட்டாயமாக கடத்திய அந்த மர்ம நபர்கள், ஓட்டுநர் தினேஷையும், கண்ணபிரானையும் தாக்கிவிட்டு 600 கிலோ எடையுள்ள மருந்துப் பொருள்களை எடுத்துக் கொண்டு, லாரியை அப்படியே விட்டுவிட்டு, காரில் தப்பினர்.
அதே தினத்தில் இரவு ரோந்துப் பணியில் இருந்த பாலுசெட்டிச்சத்திரம் போலீஸார் அந்த காரை மடக்கினர். அப்போது, அதில் இருந்த ஒரு நபர், தான் காவலர் என்றும், அதற்கான அடையாள அட்டையையும் போலீஸாரிடம் காட்டினார்.
அதனால் அப்போது போலீஸார் அவர்களை விட்டுவிட்டனர். இந்த நிலையில், மருந்து மூலப் பொருள்கள் கடத்தப்பட்டதாக லாரி பாதுகாப்பு அதிகாரி கண்ணபிரான் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை செய்து வந்தனர்.
இந்த நிலையில், வேலூர் வந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சென்னை ஆயுதப்படை காவலர் கார்த்திகேயனிடம் (37) போலீஸார் விசாரித்ததில் அவருக்கு இதில் தொடர்பு இருப்பதாகத் தெரிய வந்தது.
மேலும் அவர் கூறியதன் அடிப்படையில், வேலூரைச் சேர்ந்த ஜார்ஜ் (27), பாலாஜி (27), கார்த்திக் (30) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து ரூ. 6 கோடி மதிப்புள்ள மருந்து மூலப் பொருள்கள், கார்கள் கைப்பற்றப்பட்டன.
கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்ட மற்றொரு க்காவலர் செல்வக்குமார் உள்பட 8 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment