Saturday, September 20, 2014
மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் கொடி நாள் நிதியாக வசூலிக்கப்படுவதாக வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித் துள்ளார்.
மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள் ளதாவது:-
கொடிநாள் நிதி
முன்னாள் படைவீரர் களுக்கு என தமிழக அரசு சார்பில் ‘கொடிநாள்‘ தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதற்காக முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் இருந்து மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கென ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் நிதி வசூல் இலக்காக நிர்ணயிக்கப் பட்டு ரசீது புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல், நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும் ரசீது புத்தகங்கள் வழங்கப் பட்டுள்ளன. அதன்படி, மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆண்டுக்கு சுமார் ரூ.7 லட்சம் கொடிநாள் நிதி வசூல் செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய அலுவலகங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை, பொதுமக்களிடம் ரசீது கொடுத்து வசூல் செய்யப் பட்டது. மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அதற்கான பாராட்டு பத்திரம், சான்றிதழை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
புகார் தெரிவிக்கலாம்
கொடிநாள் ரசீது புத்தகம் ரூ. 50, 100 என அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட தொகையில் 60 சதவீதம் அதாவது சுமார் ரூ. 4½ லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், கொடி ரசீது இல்லாமல் வெளிநபர் மற்றும் முகவர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இதில் ஏதேனும் புகார்கள் இருப்பின் வட்டார போக்கு வரத்து அலுவலரிடம் நேரில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் பழனிசாமி தெரிவித் துள்ளார்.
மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள் ளதாவது:-
கொடிநாள் நிதி
முன்னாள் படைவீரர் களுக்கு என தமிழக அரசு சார்பில் ‘கொடிநாள்‘ தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதற்காக முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் இருந்து மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கென ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் நிதி வசூல் இலக்காக நிர்ணயிக்கப் பட்டு ரசீது புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல், நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும் ரசீது புத்தகங்கள் வழங்கப் பட்டுள்ளன. அதன்படி, மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆண்டுக்கு சுமார் ரூ.7 லட்சம் கொடிநாள் நிதி வசூல் செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய அலுவலகங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை, பொதுமக்களிடம் ரசீது கொடுத்து வசூல் செய்யப் பட்டது. மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அதற்கான பாராட்டு பத்திரம், சான்றிதழை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
புகார் தெரிவிக்கலாம்
கொடிநாள் ரசீது புத்தகம் ரூ. 50, 100 என அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட தொகையில் 60 சதவீதம் அதாவது சுமார் ரூ. 4½ லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், கொடி ரசீது இல்லாமல் வெளிநபர் மற்றும் முகவர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இதில் ஏதேனும் புகார்கள் இருப்பின் வட்டார போக்கு வரத்து அலுவலரிடம் நேரில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் பழனிசாமி தெரிவித் துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...

0 comments:
Post a Comment