Saturday, September 20, 2014
மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் கொடி நாள் நிதியாக வசூலிக்கப்படுவதாக வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித் துள்ளார்.
மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள் ளதாவது:-
கொடிநாள் நிதி
முன்னாள் படைவீரர் களுக்கு என தமிழக அரசு சார்பில் ‘கொடிநாள்‘ தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதற்காக முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் இருந்து மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கென ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் நிதி வசூல் இலக்காக நிர்ணயிக்கப் பட்டு ரசீது புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல், நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும் ரசீது புத்தகங்கள் வழங்கப் பட்டுள்ளன. அதன்படி, மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆண்டுக்கு சுமார் ரூ.7 லட்சம் கொடிநாள் நிதி வசூல் செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய அலுவலகங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை, பொதுமக்களிடம் ரசீது கொடுத்து வசூல் செய்யப் பட்டது. மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அதற்கான பாராட்டு பத்திரம், சான்றிதழை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
புகார் தெரிவிக்கலாம்
கொடிநாள் ரசீது புத்தகம் ரூ. 50, 100 என அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட தொகையில் 60 சதவீதம் அதாவது சுமார் ரூ. 4½ லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், கொடி ரசீது இல்லாமல் வெளிநபர் மற்றும் முகவர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இதில் ஏதேனும் புகார்கள் இருப்பின் வட்டார போக்கு வரத்து அலுவலரிடம் நேரில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் பழனிசாமி தெரிவித் துள்ளார்.
மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள் ளதாவது:-
கொடிநாள் நிதி
முன்னாள் படைவீரர் களுக்கு என தமிழக அரசு சார்பில் ‘கொடிநாள்‘ தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதற்காக முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் இருந்து மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கென ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் நிதி வசூல் இலக்காக நிர்ணயிக்கப் பட்டு ரசீது புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல், நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும் ரசீது புத்தகங்கள் வழங்கப் பட்டுள்ளன. அதன்படி, மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆண்டுக்கு சுமார் ரூ.7 லட்சம் கொடிநாள் நிதி வசூல் செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய அலுவலகங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை, பொதுமக்களிடம் ரசீது கொடுத்து வசூல் செய்யப் பட்டது. மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அதற்கான பாராட்டு பத்திரம், சான்றிதழை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
புகார் தெரிவிக்கலாம்
கொடிநாள் ரசீது புத்தகம் ரூ. 50, 100 என அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட தொகையில் 60 சதவீதம் அதாவது சுமார் ரூ. 4½ லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், கொடி ரசீது இல்லாமல் வெளிநபர் மற்றும் முகவர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இதில் ஏதேனும் புகார்கள் இருப்பின் வட்டார போக்கு வரத்து அலுவலரிடம் நேரில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் பழனிசாமி தெரிவித் துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி: ஒப்பந்த பணிகளுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரி திருச்சியில் ரயில்வே ஒப்பந்ததாரர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ப...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
0 comments:
Post a Comment