Saturday, September 20, 2014
திருப்பூரில் பனியன் வியாபாரியின் முகத்தில் மிளகாய்பொடி தூவி ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
பனியன் வியாபாரிதிருப்பூர் காலேஜ் ரோடு சாதிக்பாட்சா நகரை சேர்ந்த முகமதுவின் மகன் அப்துல்ஹக்கீம்(வயது 26). இவர் திருப்பூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள காதர்பேட்டை பகுதியில் கடைவைத்து இரண்டாம் தர பனியன் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்தநிலையில் வியாபார நிமித்தமாக பனியன்கள் கொள்முதல் செய்வதற்கு திருப்பூர் ராம்நகர் 3–வது வீதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்துக்கு தனது காரில் தனியாக சென்றார். அப்போது ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து தனது அருகில் வைத்திருந்தார்.
மிளகாய்பொடி தூவி பணம் பறிப்புபனியன் நிறுவனம் அருகில் காரை நிறுத்திய சில வினாடிகளில் காரின் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி ஒருவன், அப்துல்ஹக்கீம் முகத்தில் மிளகாய் பொடியை தூவினான். உடனே அப்துல்ஹக்கீம் பணப்பையை பிடித்துக்கொள்ள முயன்றார். அதற்குள் அவரிடம் இருந்து பணப்பையை பறித்துக்கொண்டு அங்கிருந்து அந்த ஆசாமி கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றான். இதுபற்றி அப்துல்ஹக்கீம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
அக்கம்பக்கத்தினர் அப்துல் ஹக்கீமை மீட்டு சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அப்துல்ஹக்கீம் கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் ஜெயசந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகரன், சேகர்சிங் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்துடன் சென்ற மர்ம ஆசாமியை பிடிக்க அனைத்து சோதனைச்சாவடிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு நள்ளிரவு முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் திருப்பூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
பனியன் வியாபாரிதிருப்பூர் காலேஜ் ரோடு சாதிக்பாட்சா நகரை சேர்ந்த முகமதுவின் மகன் அப்துல்ஹக்கீம்(வயது 26). இவர் திருப்பூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள காதர்பேட்டை பகுதியில் கடைவைத்து இரண்டாம் தர பனியன் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்தநிலையில் வியாபார நிமித்தமாக பனியன்கள் கொள்முதல் செய்வதற்கு திருப்பூர் ராம்நகர் 3–வது வீதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்துக்கு தனது காரில் தனியாக சென்றார். அப்போது ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து தனது அருகில் வைத்திருந்தார்.
மிளகாய்பொடி தூவி பணம் பறிப்புபனியன் நிறுவனம் அருகில் காரை நிறுத்திய சில வினாடிகளில் காரின் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி ஒருவன், அப்துல்ஹக்கீம் முகத்தில் மிளகாய் பொடியை தூவினான். உடனே அப்துல்ஹக்கீம் பணப்பையை பிடித்துக்கொள்ள முயன்றார். அதற்குள் அவரிடம் இருந்து பணப்பையை பறித்துக்கொண்டு அங்கிருந்து அந்த ஆசாமி கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றான். இதுபற்றி அப்துல்ஹக்கீம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
அக்கம்பக்கத்தினர் அப்துல் ஹக்கீமை மீட்டு சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அப்துல்ஹக்கீம் கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் ஜெயசந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகரன், சேகர்சிங் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்துடன் சென்ற மர்ம ஆசாமியை பிடிக்க அனைத்து சோதனைச்சாவடிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு நள்ளிரவு முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் திருப்பூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்ட...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட நீர் மேலாண்மை திட்டங்களை, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுத்த...
-
கோவை சிங்கநல்லூர் தொகுதியில் உள்ள நீலிகோணம்பாளையம் பகுதியில் அமைச்சர் ப.மோகன், எம்.எல்.ஏ.,சின்னசாமி ஆகியோர் மேயர் வேட்பாளர் கணபதி ராஜ்குமா...
-
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மூன்றாம் சனிக்கிழமை சர்வதேச கடற்கரையோர துப்புரவு நாளாக அனுசரிக்கப்படுகிறது . இந்த...
-
ஜெயலலிதாவுக்கு ஆதர வாக தமிழ் திரையுலகினர் சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார்கள். அ.தி.மு.க. பொதுச்செய லாளர் ஜெயலலிதாவுக்கு ச...

0 comments:
Post a Comment