Friday, September 19, 2014

On Friday, September 19, 2014 by farook press in ,    
அரியலூர் மாவட்டத்தில் பாதுகாப்புக்காக பொது சுற்றுச்சுவர் இல்லாத சிமெண்டு ஆலைகளில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்டு ஆலைகளில் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியா வுல்ஹக் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண் டுகள் இளங்கோ, செல்லதுரை, துணை சூப்பிரண்டுகள் ஸ்ரீதரன், வின்சென்ட் ஜெய ராஜ், ஜெயங்கொண்டம் உட் கோட்ட பகுதிகளில் உள்ள சிமெண்டு ஆலைகளின் நிர் வாக அதிகாரிகள், பாது காப்பு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியா வுல்ஹக் பேசியதாவது:-

ஆலைகளின் பாதுகாப்பு குறித்தும், அதன் சுற்றுப் புறங்களில் ஏதேனும் குற்ற நிகழ்வுகள் நடந்தால் கண்டு பிடிப்பதற்கு ஆலை நிர்வாகம் உதவுவது சம்பந்த மாகவும் ஆலோசிக்கப்பட் டது.

கண்காணிப்பு கேமரா

கயர்லாபாத் அரசு சிமெண்டு ஆலையில் எந்த இடத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில் லை. தேவையான இடங் களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். ஆலைகளில் பிரதான வாச லில் உள்ளே வரும் மற்றும் வெளியே செல்லும் வாகனங் களை கண்காணிக்க பொருத் தப்பட்டுள்ள கேமராக்களின் தகுதி மற்றும் பதிவு திறன் மேம்படுத்தப்பட வேண்டும்.

ஓட்டுனர்கள் ஓய்வு எடுக்கும் அறை மற்றும்¢ உணவக விடுதி களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண் டும். அப்படி பொருத் தினால்தான் அன்னிய நபர்களை கண்டு பிடிக்க முடியும். யார்டுக்கு வந்து செல்லும் வாகனங் கள் கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட வேண்டும்.

வாகன சோதனை

பிரதான சாலைகளில் இருந்து ஆலைக்கு பிரிந்து செல்லும் இடத்தில் பிரதான சாலையை நான்கு பக்கங்களும் கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட வேண் டும்.

ஆலைகளின் பிரதான வாச லில் வந்து செல்லும் வாக னங்கள் முழுமையாக சோத னை செய்யப்பட வெண் டும். ஆலைகளின் பிரதான வாசல் மற்றும் இதர வாசல் களில் வந்து செல்லும் வாகனங் களின் ஓட்டுனர் மற்றும் கிளீ னர்கள் ஆகியோர்களின் புகைப்படத்துடனான அடை யாள அட்டையை சரி பார்த்து அனுப்ப வேண்டும்.

சுற்றுச்சுவர்

ஆலைகளில் உள்ள லாரி நிறுத்தும் இடம், உணவக விடுதியில் இருப்பவர்களை அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். ஆலைகளின் பிர தான வாசல் மற்றும் இதர வாசல்களில் வந்து செல்லும் வாகனங்கள் மற்றும் ஆவணங் களை சரிபார்க்கும் அளவிற்கு போதிய காவலர்கள் நியமிக்கப் பட வேண்டும். மேலும் அந்த வாசல்களின் வழியாக வந்து செல்லும் வாகனங்களின் எண் மற்றும் ஓட்டுனர் முக வரியை நேரப்படி தனியாக ஒரு ஆவணத்தில் எழுதப்பட வேண்டும்.

ஆலைகளில் பாதுகாப்பில் உள்ள காவலர்களை அதிக அளவில் தணிக்கை செய்யப் படவேண்டும். பொது சுற்றுச் சுவர் இல்லாத ஆலைகளில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட வேண்டும். சுற்றுச்சுவர் இல் லாத லாரி நிறுத்தங்களில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட வேண்டும். இவற்றை ஆலை நிர்வாகிகள் பின்பற்ற வேண் டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: