Friday, September 19, 2014
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பூஞ்சோலையில் உள்ள அமரர் சஞ்சய்காந்தி நெசவாளர் கூட்டுறவு சங்கம் நெசவாளர்களுககு செம்பட்டி அருகே உள்ள சீவல்சரகு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 15 பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பசுமை வீடுகள் கட்டப்படுவது குறித்து மாநில கைத்தறி நெசவாளர் சங்க பொதுச்செயலாளர் பூவைச்சந்திரன் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிற்கு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–
ஏழை, எளிய நெசவாளர்களின் நலன் கருதி, தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா கிராம புறங்களில் கட்டப்படும் பசுமை வீடுகளுக்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரமும், நெசவாளர் பசுமை வீடுகளுக்கு ரூ.2 லட்சத்து 60 ஆயிரமும் மானியமாக கொடுத்து வருகிறார். நெசவாளர்களுக்கு கட்டப்படும் பசுமை வீடுகளின் உள்ளே நெசவு தறிக்கூடம் அமைப்பதற்காக மேற்கூரை 12 அடி உயரத்தில் கட்டப்பட வேண்டும். அதற்கு குறைவாக கட்டினால் நெசவு நெய்ய பயன்படுத்தப்பட முடியாத நிலை ஏற்படும். தற்போது சீவல்சரகு ஊராட்சி பகுதியில் கட்டப்பட்டு வரும் 15 வீடுகளும் உயரம் குறைவாக இருப்பதாக தெரிகிறது. எனவே அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட திட்ட இயக்குனர் பாண்டியராஜனிடம் கேட்ட போது, ‘நெசவாளர்களுக்கு கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளின் மேற்கூரை 12 அடி உயரத்திற்கு குறைவாக இருந்தால் அந்த வீட்டிற்கு அரசு வழங்கும் நிதி உதவி நிறுத்தப்படும். இந்த கட்டிட பணி குறித்து விசாரணை செய்து வருகிறோம்’ என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...
-
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். அ...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...

0 comments:
Post a Comment