Friday, September 19, 2014
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பூஞ்சோலையில் உள்ள அமரர் சஞ்சய்காந்தி நெசவாளர் கூட்டுறவு சங்கம் நெசவாளர்களுககு செம்பட்டி அருகே உள்ள சீவல்சரகு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 15 பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பசுமை வீடுகள் கட்டப்படுவது குறித்து மாநில கைத்தறி நெசவாளர் சங்க பொதுச்செயலாளர் பூவைச்சந்திரன் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிற்கு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–
ஏழை, எளிய நெசவாளர்களின் நலன் கருதி, தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா கிராம புறங்களில் கட்டப்படும் பசுமை வீடுகளுக்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரமும், நெசவாளர் பசுமை வீடுகளுக்கு ரூ.2 லட்சத்து 60 ஆயிரமும் மானியமாக கொடுத்து வருகிறார். நெசவாளர்களுக்கு கட்டப்படும் பசுமை வீடுகளின் உள்ளே நெசவு தறிக்கூடம் அமைப்பதற்காக மேற்கூரை 12 அடி உயரத்தில் கட்டப்பட வேண்டும். அதற்கு குறைவாக கட்டினால் நெசவு நெய்ய பயன்படுத்தப்பட முடியாத நிலை ஏற்படும். தற்போது சீவல்சரகு ஊராட்சி பகுதியில் கட்டப்பட்டு வரும் 15 வீடுகளும் உயரம் குறைவாக இருப்பதாக தெரிகிறது. எனவே அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட திட்ட இயக்குனர் பாண்டியராஜனிடம் கேட்ட போது, ‘நெசவாளர்களுக்கு கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளின் மேற்கூரை 12 அடி உயரத்திற்கு குறைவாக இருந்தால் அந்த வீட்டிற்கு அரசு வழங்கும் நிதி உதவி நிறுத்தப்படும். இந்த கட்டிட பணி குறித்து விசாரணை செய்து வருகிறோம்’ என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருப்பூரில் அங்கம்மாள் முத்துசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் பெண் எழுத்தாளர்களுக்கான 2014ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் வழங்கப்பட்டன. ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
குடத்தில் குடிநீர் கொண்டுவர அபாயகரமான கிணற்றில் இறங்கும் பள்ளிச்சிறுமி. பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகள் குடிநீருக்காக கிணற்றில் இறக்கி...
0 comments:
Post a Comment