Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
சென்னை, செப். 13–
தி.மு.க. தலைவர் கருணாநிதி சொந்த தொகுதியான திருவாரூரில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்வதாக இருந்தது. அப்போது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா, கட்சி பொதுக் கூட்டம் ஆகியவற்றில் அவர் பங்கேற்பதாக இருந்தது. இதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் திருவாரூர் பயணம் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் அங்கு செல்லும் தேதி மற்றும் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தி.மு.க. தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

0 comments: