Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் ஆனந்தபாபு (வயது24). இவர் தச்சுத்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய தங்கையை அதே பகுதியை சேர்ந்த ராகவன், ரெங்கராஜன் ஆகியோர் கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த ஆனந்தபாபு 2 பேரையும் கண்டித்தார். இதில் 2 தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

அப்போது ஆத்திரம் அடைந்த ராகவன், ரெங்க ராஜன் ஆகியோர் அரிவாளால் ஆனந்தபாபுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். ஆனந்தபாபுவுக்கு தலை, கால் ஆகியவற்றில் பலத்த வெட்டு விழுந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

0 comments: