Thursday, September 11, 2014

On Thursday, September 11, 2014 by Unknown in ,    


nithyananda

பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள நித்யானந்தா திருவண்ணாமலை ஆசிரமத்தில் தங்க போவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், பல்வேறு அமைப்புகள் நித்யானந்தா திருவண்ணாமலை வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
 
நித்யானந்தாவுக்கு பெங்களூரில் ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது.  பின், சீடர்களிடம் பேசிய நித்யானந்தா பிடுதி தியான பீடத்தை திருவண்ணாமலைக்கு மாற்ற முடிவு செய்துள்ளேன் என கூறியுள்ளார்.
 
இதுகுறித்து தமிழ் தேசிய மக்கள் கட்சி நிறுவனர் சிவபாபு கூறும்போது, நித்யானந்தா வருவதை எதிர்க்கவில்லை, ஆனால் கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு ஆசி வழங்குவதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.
 
மேலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் நித்யானந்தா திருவண்ணாமலை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: