Thursday, September 11, 2014
முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக, விஜயகாந்த் மீது வழக்கு
தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணை அடுத்த மாதம் 20 ஆம் தேதிக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் 30.8.2012 அன்று தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் பிறந்த
நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஜெயலலிதாவை
அவதூறாக பேசியதாக கூறி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்
வழக்குத் தொடரப்பட்டது.
இவ்வழக்கு விசாரணையில் ஆஜராவதிலிருந்து விஜயகாந்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உளுந்தூர் பேட்டை அருகே பிப்ரவரி 2 ஆம் தேதி தே.மு.தி.க.
சார்பில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட விஜயகாந்த், மனைவி பிரேமலதா,
எம்.எல்.ஏ.க்கள் பார்த்த சாரதி, வெங்கடேசன் ஆகியோர் தமிழக அரசு மற்றும்
காவல் துறையினரை, அவதூறாக பேசியதாக அரசு வக்கீல் பொன்.சிவா, விழுப்புரம்
மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது விஜயகாந்த், பிரேமலதா, பார்த்தசாரதி, வெங்கடேசன் ஆகியோர்
நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி
நீதிமன்றத்திற்கு வருவதிலிருந்து விலக்கி அளித்து சென்னை ஐகோர்ட்டு
உத்தரவிட்டுள்ள அந்த நகலை சமர்பித்து மனுதாக்கல் செய்தனர்.
பின் வழக்கை விசாரித்த நீதிபதி இவ்வழக்கு விசாரணையை அக்டோபர் 20 தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
0 comments:
Post a Comment