Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
விபத்தில் இறந்தவரின் மனைவிக்கு இழப் பீட்டு தொகை வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்து குளித்தலை கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

இறந்தார்

திருச்சி மாவட்டம் தொட் டியம் ஒன்றியம் பவுத்திரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது42) கடந்த3.8.2010 அன்று சொந்த வேலை காரண மாக முசிறிக்கு சென்றார். பின்னர் அன்று இரவு முசிறி யில் இருந்து பவுத்திரம் செல்வதற்காக அரசு பஸ்சின் முன் படிக்கட்டில் ஏறினார்.அப்போது அரசு பஸ் டிரை வர் திடீரென்று பஸ்சை எடுத்த தால் பஸ் படியில் இருந்து செல்வம் கீழே விழுந்தார். இதில் பஸ்சின் பின் சக்கரம் செல்வத்தின் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே செல்வம் இறந்தார்.

முறையீட்டு மனு

இதைத்தொடர்ந்து இழப்பீடு தொகை கேட்டு செல்வம் மனைவி மேகலா கடந்த 5.6.2012 அன்று குளித்தலை சப்-கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஐயப்ப பிள்ளை விபத்தில் இறந்து செல்வம் குடும்பத்திற்கு தமிழக போக்குவரத்து கழகம் ரூ. 6 லட்சத்து 45 ஆயிரம் இழப் பீட்டு தொகை வழங்க வேண் டும் என்று கடந்த 24.7.2013-ந் தேதி தீர்ப்பளித்தார். ஆனால் பல மாதங்கள ஆகியும் இழப்பீடு தொகை வழங்க வில்லை. இதைத் தொ டர்ந்து மேகலா முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த குளித் தலை சப்-கோர்ட்டு நீதிபதி ஐயப்பப்பிள்ளை வட்டியுடன் சேர்த்து ரூ. 7 லட்சத்து 35 ஆயிரத்து 477 இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். இந்த தொகைக்காக அரசு பஸ்சை ஜப்தி செய்ய கடந்த 5.9.14-ந்தேதி உத்தரவிட் டார்.

ஜப்தி

நீதிமன்ற உத்தரவின்படி குளித்தலை பஸ் நிலையத்தில் இருந்த அரசு பஸ்சை ஒன்றை நேற்று காலை 12 மணிக்கு கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். 

0 comments: