Thursday, September 11, 2014
சாலை விபத்தில் பெண் மரணமடைந்த நிலையில், அப்பெண்ணின் உறவினர்கள் உடுமலை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜன் என்பவரது ம னைவி அங்கம்மாள் (43). இவர், செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 7 மணி அளவில் கிருஷ்ணாபுரம் பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த கார்த்திக்ராஜா (23) என்பவர், ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மோதியதில் அங்கம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் கார்த்திக் ராஜாவை பிடித்து மடத்துக்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போதையில் இருந்த கார்த்திக் ராஜா உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அங்கம்மாளின் சடலம், பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது உறவினர்கள் சடலத்தை ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அந்தப் பகுதியில் உடுமலை டிஎஸ்பி (பொறுப்பு) இளங்கோவன் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்போது அங்கம்மாள் உறவினர்கள் காவல்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த அங்கம்மாளின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கார்த்திக் ராஜாவை கைது செய்து, அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
0 comments:
Post a Comment