Thursday, September 11, 2014
சாலை விபத்தில் பெண் மரணமடைந்த நிலையில், அப்பெண்ணின் உறவினர்கள் உடுமலை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜன் என்பவரது ம னைவி அங்கம்மாள் (43). இவர், செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 7 மணி அளவில் கிருஷ்ணாபுரம் பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த கார்த்திக்ராஜா (23) என்பவர், ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மோதியதில் அங்கம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் கார்த்திக் ராஜாவை பிடித்து மடத்துக்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போதையில் இருந்த கார்த்திக் ராஜா உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அங்கம்மாளின் சடலம், பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது உறவினர்கள் சடலத்தை ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அந்தப் பகுதியில் உடுமலை டிஎஸ்பி (பொறுப்பு) இளங்கோவன் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்போது அங்கம்மாள் உறவினர்கள் காவல்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த அங்கம்மாளின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கார்த்திக் ராஜாவை கைது செய்து, அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
0 comments:
Post a Comment