Wednesday, September 24, 2014
தமிழகத்தின் முக்கியமான தத்துவ மாத இதழான "மார்க்சிஸ்ட்" வெள்ளிவிழாவை முன்னிட்டு திருப்பூரில் செப்டம்பர் 25ம் தேதி வியாழக்கிழமை சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அரிசிக்கடை வீதியில் வியாழனன்று மாலை நடைபெறும் இக்கருத்தரங்கில் "இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மையும், 370வது பிரிவும்" என்ற தலைப்பில் அறிஞர்கள் பங்கேற்று கருத்துரை வழங்குகின்றனர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் தலைமையில் நடைபெறும் இக்கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் மாத இதழ் ஆசிரியர் குழு சார்பில் பேராசிரியர் சந்திரா அறிமுக உரை ஆற்றுகிறார். பேராசிரியர் அருணன், பத்திரிகையாளர் ஞானி, மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்எல்ஏ., ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தோர் மார்க்சிஸ்ட் மாத இதழுக்கான ஆண்டு சந்தாக்களை வழங்க உள்ளனர். முன்னதாக திருப்பூர் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நிறைவாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் நன்றி கூறுகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment