Wednesday, September 24, 2014
தமிழகத்தின் முக்கியமான தத்துவ மாத இதழான "மார்க்சிஸ்ட்" வெள்ளிவிழாவை முன்னிட்டு திருப்பூரில் செப்டம்பர் 25ம் தேதி வியாழக்கிழமை சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அரிசிக்கடை வீதியில் வியாழனன்று மாலை நடைபெறும் இக்கருத்தரங்கில் "இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மையும், 370வது பிரிவும்" என்ற தலைப்பில் அறிஞர்கள் பங்கேற்று கருத்துரை வழங்குகின்றனர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் தலைமையில் நடைபெறும் இக்கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் மாத இதழ் ஆசிரியர் குழு சார்பில் பேராசிரியர் சந்திரா அறிமுக உரை ஆற்றுகிறார். பேராசிரியர் அருணன், பத்திரிகையாளர் ஞானி, மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்எல்ஏ., ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தோர் மார்க்சிஸ்ட் மாத இதழுக்கான ஆண்டு சந்தாக்களை வழங்க உள்ளனர். முன்னதாக திருப்பூர் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நிறைவாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் நன்றி கூறுகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 

 
 
 
0 comments:
Post a Comment