Wednesday, September 24, 2014
திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பனியன் தொழிலாளர்களுக்கும் நியாயமான போனஸ் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி அக்டோபர் 7ம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துதென சிஐடியு பனியன் பொதுத் தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
திருப்பூரில் சிஐடியு பனியன் மற்றும் பொது தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகக்குழுக் கூட்டம்  செவ்வாயன்று அவிநாசி சாலை தியாகி பழனிச்சாமி நிலையத்தில் நடந்தது.
இக்கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் கே.காமராஜ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சி.மூர்த்தி, செயலாளர்கள் ஜி.சம்பத், எம்.என்.நடராஜ், கே.நாகராஜன், ஆர்.மாணிக்கம், துணைத் தலைவர்கள் எம்.சந்திரன், ரவி, பொருளாளர் வி.நடராசன் மற்றும் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது:
திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து பனியன் தொழிலாளர்களுக்கும் உடனடியாக நியாயமான போனஸ் வழங்க கோரி வரும் அக்டோபர் மாதம் 7ம் தேதி ஆயிரக்காணக்கான தொழிலாளர்களை திரட்டி திருப்பூர் குமரன் சிலை அருகில் மாபெரும் ஆர்பாட்டம் நடத்துவது என்றும், அனைத்து பனியன் தொழிலாளர்களுக்கும் 20 நாட்களுக்கு முன்பு நியாயமான போனஸ் வழங்க கேட்டு பனியன் உற்பத்தியாளர் சங்கங்களுக்கும், கம்பெனி நிர்வாகத்திற்கும் கடிதம் அனுப்புவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 

 
 
 
0 comments:
Post a Comment