Wednesday, September 24, 2014
கோவை, செப். 24–
கோவையில் நள்ளிரவில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் ரோந்து வருகிறார்கள். நேற்று இரவு வெரைட்டி ஹால் பகுதியில் போலீசார் ரோந்து வந்தனர்.
அப்போது 2 வாலிபர்கள் சந்தேகத்துக்கிடமான வகையில் ஒரு கடை முன்பு நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களைப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஒரு கடையில் கொள்ளையடிப்பதற்காக அங்கு பதுங்கியிருந்தது தெரியவந்தது. அவர்கள் மறைத்து வைத்திருந்த இரும்புக்கம்பி, ஸ்குரு டிரைவர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர்கள் பெயர் மணிகண்டன், மாசாணம் என்று தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.
போலீசார் ரோந்து சென்றிருக்காவிட்டால் நேற்று இரவு கொள்ளையர்கள் கடையில் கைவரிசை காட்டியிருப்பார்கள். கொள்ளை மற்றும் வழப்பறியை தடுக்க ரோந்துபணி தொடரும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...


0 comments:
Post a Comment