Wednesday, September 24, 2014

On Wednesday, September 24, 2014 by farook press in ,    
கோவை, செப். 24–
கோவையில் நள்ளிரவில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் ரோந்து வருகிறார்கள். நேற்று இரவு வெரைட்டி ஹால் பகுதியில் போலீசார் ரோந்து வந்தனர்.
அப்போது 2 வாலிபர்கள் சந்தேகத்துக்கிடமான வகையில் ஒரு கடை முன்பு நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களைப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஒரு கடையில் கொள்ளையடிப்பதற்காக அங்கு பதுங்கியிருந்தது தெரியவந்தது. அவர்கள் மறைத்து வைத்திருந்த இரும்புக்கம்பி, ஸ்குரு டிரைவர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர்கள் பெயர் மணிகண்டன், மாசாணம் என்று தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.
போலீசார் ரோந்து சென்றிருக்காவிட்டால் நேற்று இரவு கொள்ளையர்கள் கடையில் கைவரிசை காட்டியிருப்பார்கள். கொள்ளை மற்றும் வழப்பறியை தடுக்க ரோந்துபணி தொடரும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

0 comments: