Tuesday, September 02, 2014
திருப்பூர் மாநகரில் செல்போன் பேசுபவர்கள் மீது அபராதம் விதிக்கவும், இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் தலை கவசம் அணிய வேண்டும் எனவும் மாநகர ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருப்பூர் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் அதனால் ஏற்படும் வாகன விபத்துகளை தவிர்க்கவும் செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது என்ற சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. எனவே வாகன ஓட்டுநர்கள் செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என மாநகர காவல் ஆணையகரத்தின் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் வாகன ஓட்டுநர்கள் செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டினால் மோட்டார் வாகன சட்ட விதிமீறல் குற்றம் சாட்டப்பட்டு செல்போன் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து அபராதம் விதிக்கப்படும்.
அதே போல பெரும்பாலான வாகன விபத்துகளில் தலைக்கவசம் அணியாததால் உயிர் இழப்பு ஏற்ப்பட்டுள்ளது. மேலும் குடிபோதையில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டு உயிர் இழப்புகள் நடப்பதால் இனி வரும் காலங்களில் இரு சக்கர வாகனங்கள் ஓட்டும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதனையும், மேலும் குடி போதையில் வாகனம் ஓட்டினால் வாகன ஓட்டுநாரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கையும் எடுக்கப்படும் என தொரிவித்துக் கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள் காவல் துறைக்கு தாங்கள் ஒத்துழைப்பு கொடுத்திடவும், விபத்தில்லா திருப்பூர் மாநகரம் உருவாக்கவும் இணைந்து செயல்பட வேண்டி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
02.09.2014 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் ரோட்டில் கட்டப்பட்டுவரும் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தை மாவட்ட ஆட்சிதலைவர் திர...
.jpg)
0 comments:
Post a Comment