Tuesday, September 02, 2014
திருப்பூர் மாநகரில் செல்போன் பேசுபவர்கள் மீது அபராதம் விதிக்கவும், இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் தலை கவசம் அணிய வேண்டும் எனவும் மாநகர ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருப்பூர் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் அதனால் ஏற்படும் வாகன விபத்துகளை தவிர்க்கவும் செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது என்ற சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. எனவே வாகன ஓட்டுநர்கள் செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என மாநகர காவல் ஆணையகரத்தின் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் வாகன ஓட்டுநர்கள் செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டினால் மோட்டார் வாகன சட்ட விதிமீறல் குற்றம் சாட்டப்பட்டு செல்போன் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து அபராதம் விதிக்கப்படும்.
அதே போல பெரும்பாலான வாகன விபத்துகளில் தலைக்கவசம் அணியாததால் உயிர் இழப்பு ஏற்ப்பட்டுள்ளது. மேலும் குடிபோதையில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டு உயிர் இழப்புகள் நடப்பதால் இனி வரும் காலங்களில் இரு சக்கர வாகனங்கள் ஓட்டும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதனையும், மேலும் குடி போதையில் வாகனம் ஓட்டினால் வாகன ஓட்டுநாரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கையும் எடுக்கப்படும் என தொரிவித்துக் கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள் காவல் துறைக்கு தாங்கள் ஒத்துழைப்பு கொடுத்திடவும், விபத்தில்லா திருப்பூர் மாநகரம் உருவாக்கவும் இணைந்து செயல்பட வேண்டி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
.jpg)
0 comments:
Post a Comment