Tuesday, September 02, 2014
திருப்பூர் மாநகரில் செல்போன் பேசுபவர்கள் மீது அபராதம் விதிக்கவும், இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் தலை கவசம் அணிய வேண்டும் எனவும் மாநகர ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருப்பூர் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் அதனால் ஏற்படும் வாகன விபத்துகளை தவிர்க்கவும் செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது என்ற சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. எனவே வாகன ஓட்டுநர்கள் செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என மாநகர காவல் ஆணையகரத்தின் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் வாகன ஓட்டுநர்கள் செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டினால் மோட்டார் வாகன சட்ட விதிமீறல் குற்றம் சாட்டப்பட்டு செல்போன் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து அபராதம் விதிக்கப்படும்.
அதே போல பெரும்பாலான வாகன விபத்துகளில் தலைக்கவசம் அணியாததால் உயிர் இழப்பு ஏற்ப்பட்டுள்ளது. மேலும் குடிபோதையில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டு உயிர் இழப்புகள் நடப்பதால் இனி வரும் காலங்களில் இரு சக்கர வாகனங்கள் ஓட்டும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதனையும், மேலும் குடி போதையில் வாகனம் ஓட்டினால் வாகன ஓட்டுநாரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கையும் எடுக்கப்படும் என தொரிவித்துக் கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள் காவல் துறைக்கு தாங்கள் ஒத்துழைப்பு கொடுத்திடவும், விபத்தில்லா திருப்பூர் மாநகரம் உருவாக்கவும் இணைந்து செயல்பட வேண்டி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
.jpg)
0 comments:
Post a Comment