Friday, September 05, 2014

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. மதுரையில் செனாய் நகரில் உள்ள இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த கவுன்சிலிங்கில் 500–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரி. இவருக்கும், வேல்முருகன் என்பவருக்கும் இன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பாண்டீஸ்வரி இன்று கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டு இருந்தார்.
திருமண நாளிலேயே கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டு இருந்ததால் பாண்டீஸ்வரி–வேல்முருகன் திருமணம் காலையில் நடந்தது. திருமணம் முடிந்த உடனேயே மணக்கோலத்தில் பாண்டீஸ்வரி தனது கணவருடன் ஆசிரியர் பணி நியமன கவுன்சிலிங்கில் கலந்து கொண்டார்.
இதேபோல் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற தல்லாகுளத்தைச் சேர்ந்த கார்த்திகாவுக்கும் இன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி கார்த்திகா– முத்துகிருஷ்ணன் திருமணம் பூங்கா முருகன் கோவிலில் நடந்தது. பின்னர் அவர்கள் மணக்கோலத்தில் கவுன்சிலிங்கில் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment