Wednesday, September 10, 2014
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
அரசு கந்து வட்டியை வேறு பெயர் வைத்து முறைப்படுத்த வேண்டும். கந்து வட்டிக்கு பணம் கொடுப்பதை முழுமையாக நிறுத்தினால் பல ஏழைக் குடும்பங்கள், குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வார்கள். சாராயம் விற்கின்ற தொழிலை விட ஏழை மக்களுக்கு உதவுகின்ற இந்த தொழில் மோசமா?
தமிழகத்தில் 2 லட்சம் பேர் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களினால் சொத்தே இல்லாத 1 கோடி ஏழை மக்கள் பயனடைகிறார்கள். வங்கிகள் வாங்குகின்ற வட்டி 18 சதவீதம் வரை இருந்தால், அந்த கட்டணம் இந்த கட்டணம் என்று மறைமுகமாக 24 சதவீதத்தில் வந்து நிற்கின்றது. அதுமட்டுமில்லாமல் சொந்த சொத்துக்களை அடமானம் வைத்தால் கூட மூன்றாவது இன்னொரு நபர் உத்திரவாத கையெழுத்து போட வேண்டும்.
சொத்தே இல்லாத ஏழை மக்கள் வங்கிகளிலோ, அரசு நிறுவனங்களிலோ அவசரத்துக்கு கடன் வாங்க வழியே கிடையாது. ஆனால் இவர்கள் எந்த உத்திரவாதமும் இல்லாமல் ஏழை மக்களை நம்பி அவசரத்திற்கு உதவுபவர்களாக இருகிறார்கள். மனிதாபிமானம் உள்ள நல்ல மனிதர்கள்தான் இதில் பெரும்பாலும் உள்ளார்கள். தினசரி அவசர தேவைகளுக்கு ஏழை மக்களுக்கு இதை விட்டால் வேறு வழி கிடையாது. ஏழை மக்களுக்கு எல்லா விதமான அவசர தேவைகளுக்கும் உதவுபவர்களை கடும் குற்றவாளிகளைப் போல் பார்க்கக்கூடாது.
இந்த ஏழை மக்களுக்கும், சிறு ,சிறு வியாபாரம் செய்து பிழைக்கின்ற மக்களுக்கும் அரசு அவர்களை காப்பாற்ற என்ன மாற்று ஏற்பாட்டை வைத்துள்ளது? மாற்று வழியை சொல்லிவிட்டு குண்டர் தடுப்புச் சட்டம் பயன்படுத்துவதை பற்றி பேசுங்கள். அரசு இந்த தொழிலுக்கு அங்கீகாரம் கொடுத்து, ஒரு குழு அமைத்து வரன்முறைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment