Monday, September 08, 2014
மதுரை சின்னசொக்கி குளத்தை சேர்ந்தவர் ஜமால் முகம்மது (வயது61), ரியல்
எஸ்டேட் அதிபர். இவர் சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமாகிவிட்டார்.
இதுகுறித்து அவரது உறவினர்கள் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தனர்.
இந்த நிலையில் மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்த சங்கர் என்ற வாலிபர் மேலூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவர் ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால் முகம்மதுவிடம் வேலை பார்த்து வந்ததாகவும், ரூ.2 லட்சம் பணம் தரமறுத்ததால் கொடைக்கானல் மலையில் வைத்து கொலை செய்து விட்டு, உடலை பள்ளத்தில் வீசி விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து சங்கர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்பட்ட திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த பூங்கொடி (39) என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.
மாயமான ஜமால் முகம்மது கொலை செய்யப்பட்டாரா? என்பதை ஊர்ஜிதப்படுத்த மதுரை தல்லாகுளம் சப்–இன்ஸ்பெக்டர் கார்த்திக்செல்வம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொடைக்கானலுக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே 100 அடி பள்ளத்தில் எரிந்த நிலையில் ஆண் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடலை அங்கேயே பிரேத பரிசோதனை செய்து புதைத்து விட்டனர்.
உடல் அருகே கிடந்த ஆடை மற்றும் சில பொருட்களை கைப்பற்றிய கொடைக்கானல் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த உடல் ரோட்டில் இருந்து 100 அடிபள்ளத்தில் தூக்கி எறிந்துள்ளதால் அந்த உடல் மதுரையில் மாயமான ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால் முகம்மதுவின் உடலாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எனவே இதுகுறித்து மதுரை தனிப்படை போலீசார் கொடைக்கானல் போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாயமான ஜமால் முகம்மதுவின் உறவினர்களையும் அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள்.
இதனிடையே கோர்ட்டில் சரண் அடைந்த சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனு செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சித்திக், மார்த்தாண்டன், மாரியப்பன் ஆகியோரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்த சங்கர் என்ற வாலிபர் மேலூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவர் ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால் முகம்மதுவிடம் வேலை பார்த்து வந்ததாகவும், ரூ.2 லட்சம் பணம் தரமறுத்ததால் கொடைக்கானல் மலையில் வைத்து கொலை செய்து விட்டு, உடலை பள்ளத்தில் வீசி விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து சங்கர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்பட்ட திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த பூங்கொடி (39) என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.
மாயமான ஜமால் முகம்மது கொலை செய்யப்பட்டாரா? என்பதை ஊர்ஜிதப்படுத்த மதுரை தல்லாகுளம் சப்–இன்ஸ்பெக்டர் கார்த்திக்செல்வம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொடைக்கானலுக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே 100 அடி பள்ளத்தில் எரிந்த நிலையில் ஆண் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடலை அங்கேயே பிரேத பரிசோதனை செய்து புதைத்து விட்டனர்.
உடல் அருகே கிடந்த ஆடை மற்றும் சில பொருட்களை கைப்பற்றிய கொடைக்கானல் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த உடல் ரோட்டில் இருந்து 100 அடிபள்ளத்தில் தூக்கி எறிந்துள்ளதால் அந்த உடல் மதுரையில் மாயமான ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால் முகம்மதுவின் உடலாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எனவே இதுகுறித்து மதுரை தனிப்படை போலீசார் கொடைக்கானல் போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாயமான ஜமால் முகம்மதுவின் உறவினர்களையும் அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள்.
இதனிடையே கோர்ட்டில் சரண் அடைந்த சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனு செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சித்திக், மார்த்தாண்டன், மாரியப்பன் ஆகியோரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
திருச்சி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை மதுரையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்ப...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
0 comments:
Post a Comment