Monday, September 08, 2014
மதுரை ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் மகேந்திரன்.
இவர் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக உள்ளார். இவரது வீட்டில் இருந்து
இன்று காலை புகை வந்துள்ளதை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர்.இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன்பேரில் தல்லாகுளம் போலீசார் ஆயுதப்படை குடியிருப்புக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போலீஸ்காரர் மகேந்திரனின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது அங்கு வீட்டுக்குள் ஒரு பெண் தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த பெண்ணின் பெயர் ஆனந்தி (வயது32) என்பதும், கே.கே.நகரைச்சேர்ந்த முருகேசன் என்பவரின் மனைவி என்பதும் தெரியவந்தது.
கடந்த ஓராண்டாக கணவரை பிரிந்து ஆனந்தி வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் அவர் போலீஸ்காரர் மகேந்திரன் வீட்டில் தீயில் எரிந்து இறந்துள்ளார். அவர் இங்கு வந்தது எப்படி? தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டாரா? என்பது மர்மமாக உள்ளது.
தற்போது போலீஸ்காரர் மகேந்திரன் மாயமாகி விட்டார். அவர் சிக்கினால் தான் இளம்பெண் சாவின் உண்மை நிலவரம் தெரியவரும். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
போலீஸ் குடியிருப்பிற்குள் போலீஸ்காரர் வீட்டிலேயே இளம்பெண் தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடந்தது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...
0 comments:
Post a Comment