Thursday, September 11, 2014
தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, பொதுச் செயலாளர் க. அன்பழகன் ஆகியோரிடம்
தெரிவித்து, அவர்களது ஆலோசனைகளைப் பெற்ற பிறகே மாவட்டங்கள் தோறும் சென்று
நிர்வாகிகளைச் சந்தித்து வருவதாக தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின்
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கையில், தி.மு.க. தலைவரின் உடல் நிலை ஒத்துழைக்காத காரணத்தால், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழக்க என்ன காரணம் என்பதை அறிவதற்காக, கட்சித் தலைவர், பொதுச் செயலாளர் வகுத்துத் தந்த பாதையில் தான் பணியாற்றிவருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"தலைவரின் அடிஒற்றி நடப்பவன்"
"இந்தச் சுற்றுப் பயணத் துவக்கத்திலேயே சில ஏடுகள் தலைமையைப் பிடிக்கத் திட்டமிட்டு ஸ்டாலின் சுற்றுப்பயணம் எனத் தலைப்பு" இட்டிருந்ததாகவும் "தலைவரையும் இந்த இயக்கத்தையும் யாராலும் பிரித்துப் பார்க்க முடியாது. என்னைப் பொறுத்தவரை நான் தலைவரின் அடி ஒற்றி நடப்பவன்" என்றும் "தலைவரின் அறிவு, ஆற்றல், அரசியல் வியூகங்கள், ஓய்வறியா உழைப்பு என அத்தனை குணங்களையும் பெற்றவர்கள் தோன்றுவது எளிதல்ல; அதனை உணர்ந்தவன் நான்" என்றும் ஸ்டாலின் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
"தலைவருக்கும் எனக்கும் இடையே பிளவை உருவாக்கிட நினைத்து கண்டதை எழுதுபவர்களுக்குக் கூறிக்கொள்வேன் - சிண்டு முடியும் வேலையை தொடராமல் இனியாவது நிறுத்துங்கள்" என ஸ்டாலின் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் அவரது மகனும் கட்சியின் பொருளாளருமான மு.க. ஸ்டாலினுக்கும் இடையில் மோதல் இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில், மு.க. ஸ்டாலின் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கையில், தி.மு.க. தலைவரின் உடல் நிலை ஒத்துழைக்காத காரணத்தால், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழக்க என்ன காரணம் என்பதை அறிவதற்காக, கட்சித் தலைவர், பொதுச் செயலாளர் வகுத்துத் தந்த பாதையில் தான் பணியாற்றிவருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"தலைவரின் அடிஒற்றி நடப்பவன்"
"இந்தச் சுற்றுப் பயணத் துவக்கத்திலேயே சில ஏடுகள் தலைமையைப் பிடிக்கத் திட்டமிட்டு ஸ்டாலின் சுற்றுப்பயணம் எனத் தலைப்பு" இட்டிருந்ததாகவும் "தலைவரையும் இந்த இயக்கத்தையும் யாராலும் பிரித்துப் பார்க்க முடியாது. என்னைப் பொறுத்தவரை நான் தலைவரின் அடி ஒற்றி நடப்பவன்" என்றும் "தலைவரின் அறிவு, ஆற்றல், அரசியல் வியூகங்கள், ஓய்வறியா உழைப்பு என அத்தனை குணங்களையும் பெற்றவர்கள் தோன்றுவது எளிதல்ல; அதனை உணர்ந்தவன் நான்" என்றும் ஸ்டாலின் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
"தலைவருக்கும் எனக்கும் இடையே பிளவை உருவாக்கிட நினைத்து கண்டதை எழுதுபவர்களுக்குக் கூறிக்கொள்வேன் - சிண்டு முடியும் வேலையை தொடராமல் இனியாவது நிறுத்துங்கள்" என ஸ்டாலின் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் அவரது மகனும் கட்சியின் பொருளாளருமான மு.க. ஸ்டாலினுக்கும் இடையில் மோதல் இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில், மு.க. ஸ்டாலின் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
*சமயபுரம் கோவிலில் தமிழக அரசு ஆணையை மீறி உள்ளே நுழைந்து தரிசனம்* தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்திலிருந்து அனைத்து திருக்க...
0 comments:
Post a Comment