Thursday, September 25, 2014
திருப்பூர்,செப்.25-
திருப்பூர் கோ-ஆப்டெக்ஸ் குமரன் விற்பனை நிலையத்தில் மகாராணிபட்டுச் சேலையை கலெக்டர் கோவிந்தராஜ் அறிமுகம் செய்து வைத்தார்.
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 79 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்கள உற்பத்தி செய்யும் ரகங்களை கொமுதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக சந்தைப்படுத்தி நெசவாளர்களுக்கு பேருதவி புரிந்து வருகிறது.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பட்டு ரக உற்பத்தியில் பாரம்பரியமாக திகழும் காஞ்சிபுரம்,சேலம்,கோவை,ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள் வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்ப்பை பெற்று திகழ்கின்றன.வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் காலத்திற்கேற்ற புதிய வடிவமைப்புகளை கோ-ஆப்டெக்ஸ் அறிமுகப்படுத்தி வருகின்றது.
இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனைக்காக கைத்தறி ரகங்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் அனைத்து நிலையங்களிலும் கடந்த 15.09.2014 முதக்ல், அடுத்த ஆண்டு 31.01.2015 வரை 30 சதவீதம் அரசு சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. திருப்பூர் மாநகராட்சி அலுவலக வீதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் குமரன் விற்பனை நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் விற்பனை மற்றும் தங்க மழை பரிசு திட்டம் ஆகியவற்றை துவக்கி வைத்தார்.மேலும் புதிய வரவான மகாராணிபட்டுச் சேலையை கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் கூறியதாவது:-
தீபாவளி சிறப்பு விற்பனைக்காக தமலகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புகளுடன் கூடிய பட்டு பருத்தி சேலைகளில் போர்வைகள்,படுக்கை விரிப்புகள்,தலையணை உறைகள, வேஷ்டி, லுங்கி,துண்டு ரகங்கள ஆடவர்கள அணியும் ஆயத்த சட்டைகள், மகளிர் விரும்பும் சுடிதார் ரகங்கள ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆண்டில் புது முயற்சியாக மகாராணி பட்டுச் சேலைகளை தீபாவளி பண்டிகை விற்பனைக்கு அறிமுகபடுத்தபத்டுள்ளது.200 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆட்சி செய்த சாத்தூர், புதுக்கோட்டை,சின்னமனூர்,தலைவன் கோட்டை, போன்ற ஜமீன்களின் அரண்மணைகளுக்கு கோ-ஆப்டெக்ஸ் வடிவமைப்பு குழுவினர் நேரில் சென்று மன்னர்களின் ராணிகள்,இளவரசிகள் அணிந்த சேலைகளை சேகரித்து அவற்றை போலவே அச்சு அசலாக வெண்பட்டில் சிறுமுகை, திருப்பூர் கணபதிபாளையம், கோயில் வழி ஆகிய நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கோ-ஆப்டெக்ஸ்மகாராணி பட்டுச் சேலைகள் வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த சேலைகள் ரூ.7 ஆயிரம் முதல், ரூ.9 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.இந்த சேலைகளுக்கும் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
14ம் நூற்றாண்டில் மைசூரை ஆட்சி செய்த அதியா துறையாரு மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ராணிகள் உடுத்திய சேலைகளை கோ-ஆப்டெக்ஸ் அவரது குடும்ப வாரிசுகளிடமிருந்து பிரத்தியகமாய் பெற்றுள்ளது.கடந்த ஆண்டு தீபாவளி 2013 ம் ஆண்டின் பொது கோவை மண்டலம் செய்த விற்பனை ரூ.1473.88 லட்சங்களாகும்.நடப்பு ஆண்டிற்கு தீபாவளி 2014ம் ஆண்டிற்கு கோவை மண்டலத்திற்கு ரூ.2400.00 லட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 2013 ஆண்டின் பொது கோ-ஆப்டெக்ஸ் திருப்பூர் குமரன் விற்பனை நிலையம் ரூ.49.71 லட்சம் விற்பனை செய்துள்ளது.நடப்பு ஆண்டிற்கு தீபாவளி 2014 ஆண்டிற்கு ரூ.75.00 லட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயிக்கபத்டுள்ளது.மேலும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்கள் கடந்த ஆண்டு தீபாவளி 2013 ஆண்டின் போது 155.62 லட்சங்கள் ஆகும்.நடப்பு ஆண்டிற்கு திருப்பூர் மாவட்டத்திற்கு ரூ.240.00 லட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது அரசு பணியாளர்கள் மற்றும் அரசு சார்பு நிறுவனக்களின் பணியாளர்களுக்கு கடன் வசதி அளிக்கப்படுகிறது.இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் கோரினார்.
நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் எஸ்.எம்.ஏ.செய்யது முகமது,வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மேலாளர் து.சதாசிவம், தணிக்கை மேலாளர் கோ.ராஜேந்திரன், துணை மண்டல மேலாளர் பி.ரவி, ரக மேலாளர் கே.ரவி, மக்கள் தொடர்பு மேலாளர் ஆர்.நடராஜன், கோ-ஆப்டெக்ஸ் திருப்பூர் குமரன் விற்பனை நிலைய மேலாளர் எஸ்.ஏ.தனபாலன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவநீதகிருஷ்ணன், உதவி அலுவலர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
விமான பராமரிப்பு பணிகளை இந்தியாவிலேயே மேற்கொள்ளும் வகையில் புதிய விமான கொள்கைகளை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக விமான போக்குவ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
கோவை சிங்கநல்லூர் தொகுதியில் உள்ள நீலிகோணம்பாளையம் பகுதியில் அமைச்சர் ப.மோகன், எம்.எல்.ஏ.,சின்னசாமி ஆகியோர் மேயர் வேட்பாளர் கணபதி ராஜ்குமா...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
இந்தியாவில் இருக்கும் எல்லா தீவிரவாதமும் இந்தியாவுக்கு ஏற்றுமதிதான் செய்யப்படுகிறது என்றும் இந்தியாவில் அது வளர்க்கப்படுவதில்லை என்று பிரதம...



0 comments:
Post a Comment