Thursday, September 25, 2014

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ளது தேனா புதுக்கோட்டை கிராமம். இங்கு, முதுகளத்தூர் சட்டமன்ற அ.தி.மு.க. உறுப்பினர் முருகனுக்கு தொடர்புடைய செம்மண் குவாரி உள்ளது. இந்த குவாரி அருகே ராமநாதபுரம் மாவட்ட எல்லையான சூலூர் கிராமத்தில் துரைப்பாண்டி என்ற வழக்கறிஞருக்கு செம்மண் குவாரி உள்ளது.
இந்நிலையில். முருகனுக்கு தொடர்புடைய குவாரிக்கு
லைசன்ஸ் காலாவதி ஆகிவிட்டதால் அதை புதுப்பிக்க முருகன் விண்ணப்பம்
செய்துள்ளார். இதனால் கடந்த ஒருவாரமாக அவரது குவாரி செயல்படாமல் உள்ளது.
ஆனால் இரவு நேரங்களில் முருகன் குவாரியில் இருந்து துரைபாண்டி குவாரிக்கு
மணல் அள்ளபட்டு, விற்பனை செய்யபட்டு வந்துள்ளது. இரவு நேரங்களில் இந்த மணல்
கடத்தும் விவகாரம் மானாமதுரை காவல்நிலையத்திற்கு தகவல் போயிருக்கிறது.
செப்டம்பர் 23ஆம் தேதியன்று நள்ளிரவு நேரத்தில்,
மானாமதுரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், ஊர்க்காவல்படை
காவலர் இருவருடன் ஸ்பாட்டுக்கு போயிருக்கிறார். அப்போது முத்துகிருஷ்ணன்
மஃப்டியில் இருந்திருக்கிறார். மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரிகளை நிறுத்தி
விசாரித்தாராம். அப்பொழுது லாரி ஓட்டுனர்களுக்கும், போலீஸுக்கும் இடையே
வாக்குவாதம் நடந்திருக்கிறது. இதுகுறித்து வழக்கறிஞர் துரைப்பாண்டிக்கு
தகவல் சொல்ல... அவர் விரைந்து வந்திருக்கிறார். இவரும் போலீஸாருடன்
வாக்குவாதம்... கைகலப்பு என்று அதிரடியாக இறங்க அங்கே கலாட்டா
அரங்கேறிருக்கிறது.

போலீஸாருக்கு சரமாரியாக அடி விழ... ஒரு கட்டத்தில்,
எஸ்.ஐ.யான முத்துகிருஷ்ணன் மின்னல் வேகத்தில் அவரது துப்பாக்கியை எடுத்து
வானை நோக்கி சுட்டிருக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத மணல்
கோஷ்டியினர், மிரண்டு போய் அந்த இடத்தை விட்டு தலைதெறிக்க
ஒடிவிட்டார்களாம். அதையடுத்து, நான்கு டிப்பர் லாரிகள் மற்றும் மணல் அள்ள
பயன்படுத்திய ஜே.சி.பி. இயந்திரம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல்
செய்துள்ளனர். மேலும் துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து சிவகங்கை மாவட்ட
காவல்துறையின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியதோடு,
அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு உடுமலை காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.2 ...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
0 comments:
Post a Comment