Thursday, September 18, 2014
வத்தலக்குண்டு அருகே ரேசன் கடை ஊழியர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். அங்கு பொதுமக்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ரேசன் கடையில் தகராறு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் ரெங்கப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தெப்பத்துப்பட்டியில் ரேசன் கடை உள்ளது, இந்த கடையில் 470 ரேசன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேசன் கடையில் ஊழியராக சுப்பிரமணியும், உதவியாளராக பட்சிராஜனும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பகலில் அந்த ஊரைச் சேர்ந்த வீரம்மாள் என்பவர் ரேசன் பொருட்கள் வாங்க வந்தார். அப்போது சில பொருட்கள் இல்லை என்று சுப்பிரமணி கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
சிறைபிடிப்பு
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஊர் பொதுமக்கள் ரேசன் கடைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சுப்பிரமணி, பட்சிராஜன் ஆகிய இரண்டு பேரையும் ரேசன் கடைக்குள் பூட்டி வைத்தனர். ரேசன் கடை ஊழியர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வருவாய் அலுவலர்கள் துரைப்பாண்டி, அபிராமி, கிராம நிர்வாக அதிகாரி முருகன் மற்றும் விருவீடு போலீசார் ஆகியோர் தெப்பத்துப்பட்டி கிராமத்துக்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பின்னர் சுப்பிரமணி, பட்சிராஜன் இரண்டு பேரையும் வேறு ஊருக்கு இடம் மாற்றம் செய்வதாக அதிகாரிகள் உறுதி கூறினார்கள். இதைத்தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்ட இரண்டு பேரும் விடுவிக்கப்பட்டனர். இதனால் தெப்பத்துப்பட்டியில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பான சூழ¢நிலை நிலவியது.
ரேசன் கடையில் தகராறு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் ரெங்கப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தெப்பத்துப்பட்டியில் ரேசன் கடை உள்ளது, இந்த கடையில் 470 ரேசன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேசன் கடையில் ஊழியராக சுப்பிரமணியும், உதவியாளராக பட்சிராஜனும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பகலில் அந்த ஊரைச் சேர்ந்த வீரம்மாள் என்பவர் ரேசன் பொருட்கள் வாங்க வந்தார். அப்போது சில பொருட்கள் இல்லை என்று சுப்பிரமணி கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
சிறைபிடிப்பு
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஊர் பொதுமக்கள் ரேசன் கடைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சுப்பிரமணி, பட்சிராஜன் ஆகிய இரண்டு பேரையும் ரேசன் கடைக்குள் பூட்டி வைத்தனர். ரேசன் கடை ஊழியர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வருவாய் அலுவலர்கள் துரைப்பாண்டி, அபிராமி, கிராம நிர்வாக அதிகாரி முருகன் மற்றும் விருவீடு போலீசார் ஆகியோர் தெப்பத்துப்பட்டி கிராமத்துக்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பின்னர் சுப்பிரமணி, பட்சிராஜன் இரண்டு பேரையும் வேறு ஊருக்கு இடம் மாற்றம் செய்வதாக அதிகாரிகள் உறுதி கூறினார்கள். இதைத்தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்ட இரண்டு பேரும் விடுவிக்கப்பட்டனர். இதனால் தெப்பத்துப்பட்டியில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பான சூழ¢நிலை நிலவியது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...

0 comments:
Post a Comment