Friday, September 12, 2014

On Friday, September 12, 2014 by Unknown in ,    




திருப்பூர், : திருப்பூரில் தனியார் பிரிண்டிங் நிறுவனத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் நிலத்தடி நீர், குடிநீர் மாசுபடுவதாக கூறி பிரிண்டிங் நிறுவனத்தை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர். இதையடுத்து, பிரிண்டிங் நிறுவனத்தை மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி புதுத்தோட்டம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிரிண்டிங் நிறுவனம் ஒன்று செயல் பட்டு வருகிறது. இந்த பிரிண்டிங் நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர்  நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள இரண்டு சோலார் தளத்திற்கு அனுப்பப்படுகிறது. பின்னர் அந்த கழிவுநீர் ஆவியாக்கப்பட்டு கழிவுகள் அகற்றப்படுகிறது. இந்நிலையில், இந்த பிரிண்டிங் நிறுவனத்திலி ருந்து வெளியேறும் கழிவு நீர், சோலார் தளம் மட்டுமின்றி, நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள ஒரு பெரிய குழியில் தேங்கி நிற்பதாக புகார் எழுந்துள்ளது. நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள குழியில் நீண்ட நாட்களாக சாயம் கலந்த கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குடிநீர் மாசுபட்டு நிறம் மாறி உள்ளதாகவும், உடல் உபாதை கள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் புகார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பிரிண்டிங் நிறுவனத்தை நேற்று காலை திடீ ரென முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வீரபாண்டி இன்ஸ்பெக்டர் சண்முகம், எஸ்ஐ அப்துல்நிகார் தலைமையில் போலீ சார் மற்றும் 53வது வார்டு கவுன்சிலர் சிவா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று முற்றுகை யில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் திருப்பூர் மாவட்ட வடக்கு உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன் தலைமை யில், அதிகாரிகள் புகார் கூறப்பட்ட பிரிண் டிங் நிறுவனத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதில், பிரிண்டிங் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறைகேடாக ஒரு குழியில் தேங்கி இருந்தது தெரிய வந்தது.இதை தொடர்ந்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் திருப்பூர் மாவட்ட வடக்கு உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன், பிரிண்டிங் நிறுவனத்தில் இருந்த பிரிண்டிங் இயந்திரத்துக்கு சீல் வைத்தார். மேலும், அங்கு தேங்கியிருந்த கழிவுநீரை ஆய்வு செய்து, அதை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றி, அங்கிருக்கும் கழிவுகளை அப்புறப்படுத்தி குழியை மூட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, பிரிண்டிங் நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

0 comments: