Friday, September 12, 2014
திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி புதுத்தோட்டம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிரிண்டிங் நிறுவனம் ஒன்று செயல் பட்டு வருகிறது. இந்த பிரிண்டிங் நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள இரண்டு சோலார் தளத்திற்கு அனுப்பப்படுகிறது. பின்னர் அந்த கழிவுநீர் ஆவியாக்கப்பட்டு கழிவுகள் அகற்றப்படுகிறது. இந்நிலையில், இந்த பிரிண்டிங் நிறுவனத்திலி ருந்து வெளியேறும் கழிவு நீர், சோலார் தளம் மட்டுமின்றி, நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள ஒரு பெரிய குழியில் தேங்கி நிற்பதாக புகார் எழுந்துள்ளது. நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள குழியில் நீண்ட நாட்களாக சாயம் கலந்த கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குடிநீர் மாசுபட்டு நிறம் மாறி உள்ளதாகவும், உடல் உபாதை கள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் புகார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பிரிண்டிங் நிறுவனத்தை நேற்று காலை திடீ ரென முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வீரபாண்டி இன்ஸ்பெக்டர் சண்முகம், எஸ்ஐ அப்துல்நிகார் தலைமையில் போலீ சார் மற்றும் 53வது வார்டு கவுன்சிலர் சிவா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று முற்றுகை யில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் திருப்பூர் மாவட்ட வடக்கு உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன் தலைமை யில், அதிகாரிகள் புகார் கூறப்பட்ட பிரிண் டிங் நிறுவனத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதில், பிரிண்டிங் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறைகேடாக ஒரு குழியில் தேங்கி இருந்தது தெரிய வந்தது.இதை தொடர்ந்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் திருப்பூர் மாவட்ட வடக்கு உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன், பிரிண்டிங் நிறுவனத்தில் இருந்த பிரிண்டிங் இயந்திரத்துக்கு சீல் வைத்தார். மேலும், அங்கு தேங்கியிருந்த கழிவுநீரை ஆய்வு செய்து, அதை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றி, அங்கிருக்கும் கழிவுகளை அப்புறப்படுத்தி குழியை மூட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, பிரிண்டிங் நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...
0 comments:
Post a Comment