Friday, September 12, 2014
திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி புதுத்தோட்டம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிரிண்டிங் நிறுவனம் ஒன்று செயல் பட்டு வருகிறது. இந்த பிரிண்டிங் நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள இரண்டு சோலார் தளத்திற்கு அனுப்பப்படுகிறது. பின்னர் அந்த கழிவுநீர் ஆவியாக்கப்பட்டு கழிவுகள் அகற்றப்படுகிறது. இந்நிலையில், இந்த பிரிண்டிங் நிறுவனத்திலி ருந்து வெளியேறும் கழிவு நீர், சோலார் தளம் மட்டுமின்றி, நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள ஒரு பெரிய குழியில் தேங்கி நிற்பதாக புகார் எழுந்துள்ளது. நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள குழியில் நீண்ட நாட்களாக சாயம் கலந்த கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குடிநீர் மாசுபட்டு நிறம் மாறி உள்ளதாகவும், உடல் உபாதை கள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் புகார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பிரிண்டிங் நிறுவனத்தை நேற்று காலை திடீ ரென முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வீரபாண்டி இன்ஸ்பெக்டர் சண்முகம், எஸ்ஐ அப்துல்நிகார் தலைமையில் போலீ சார் மற்றும் 53வது வார்டு கவுன்சிலர் சிவா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று முற்றுகை யில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் திருப்பூர் மாவட்ட வடக்கு உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன் தலைமை யில், அதிகாரிகள் புகார் கூறப்பட்ட பிரிண் டிங் நிறுவனத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதில், பிரிண்டிங் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறைகேடாக ஒரு குழியில் தேங்கி இருந்தது தெரிய வந்தது.இதை தொடர்ந்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் திருப்பூர் மாவட்ட வடக்கு உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன், பிரிண்டிங் நிறுவனத்தில் இருந்த பிரிண்டிங் இயந்திரத்துக்கு சீல் வைத்தார். மேலும், அங்கு தேங்கியிருந்த கழிவுநீரை ஆய்வு செய்து, அதை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றி, அங்கிருக்கும் கழிவுகளை அப்புறப்படுத்தி குழியை மூட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, பிரிண்டிங் நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
தேனி மாவட்டத்தில், குடிநீர் அபிவிருத்தி திட்டம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணி களை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார். கலெக...
-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவ...
-
'பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பி...
-
திருப்பூர், செவந்தம்பாளையம் தடுப்பணையில் கட்டடக் கழிவை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்...
-
வியாசர்பாடி மேம்பால பணிகள், இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அக்டோபர் மாதத்திற்குள் முடிய வாய்ப்பில்லை என தெரிகிறது. வியாசர்பாடியில் பழமைவாய்ந்த...
0 comments:
Post a Comment