Friday, September 12, 2014
திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி புதுத்தோட்டம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிரிண்டிங் நிறுவனம் ஒன்று செயல் பட்டு வருகிறது. இந்த பிரிண்டிங் நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள இரண்டு சோலார் தளத்திற்கு அனுப்பப்படுகிறது. பின்னர் அந்த கழிவுநீர் ஆவியாக்கப்பட்டு கழிவுகள் அகற்றப்படுகிறது. இந்நிலையில், இந்த பிரிண்டிங் நிறுவனத்திலி ருந்து வெளியேறும் கழிவு நீர், சோலார் தளம் மட்டுமின்றி, நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள ஒரு பெரிய குழியில் தேங்கி நிற்பதாக புகார் எழுந்துள்ளது. நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள குழியில் நீண்ட நாட்களாக சாயம் கலந்த கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குடிநீர் மாசுபட்டு நிறம் மாறி உள்ளதாகவும், உடல் உபாதை கள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் புகார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பிரிண்டிங் நிறுவனத்தை நேற்று காலை திடீ ரென முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வீரபாண்டி இன்ஸ்பெக்டர் சண்முகம், எஸ்ஐ அப்துல்நிகார் தலைமையில் போலீ சார் மற்றும் 53வது வார்டு கவுன்சிலர் சிவா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று முற்றுகை யில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் திருப்பூர் மாவட்ட வடக்கு உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன் தலைமை யில், அதிகாரிகள் புகார் கூறப்பட்ட பிரிண் டிங் நிறுவனத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதில், பிரிண்டிங் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறைகேடாக ஒரு குழியில் தேங்கி இருந்தது தெரிய வந்தது.இதை தொடர்ந்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் திருப்பூர் மாவட்ட வடக்கு உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன், பிரிண்டிங் நிறுவனத்தில் இருந்த பிரிண்டிங் இயந்திரத்துக்கு சீல் வைத்தார். மேலும், அங்கு தேங்கியிருந்த கழிவுநீரை ஆய்வு செய்து, அதை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றி, அங்கிருக்கும் கழிவுகளை அப்புறப்படுத்தி குழியை மூட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, பிரிண்டிங் நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
P.R. No.374 Date:22.07.2016 PRESS RELEA...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...
-
அது 1995 ஆம் ஆண்டின் பிற்பகுதி . சென்னையில் நடந்த அந்த சினிமா விருதுவிழாவில் விருது வாங்குவதற்கு மேடை ஏறிகிறார் அந்த நடிகர். அந்த நடிக...
-
உடுமலை,: உடுமலை நேதாஜி மைதானத்தில் தென்னிந்திய கபடி போட்டி இன்று துவங்கி 26ம் தேதி முடிய 3 நாட்கள் நடக்கிறது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி,...
0 comments:
Post a Comment