Friday, September 05, 2014
இந்திய தொழில் கூட்டமைப்பின் அங்கமான இந்திய பெண்கள் கூட்டமைப்பு சார்பில் இன்றைய பெண்களின் மாறிவரும் பங்கும், பொறுப்புகளும் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் டி.ஜி.பி. கிரண்பேடி பேசியதாவது:–
படித்த மக்கள் மனதிலும் ஆண், பெண் பாகுபாடு நிலவுகிறது. இந்த வேறுபாட்டை நீக்க பெண்கள் முன்வர வேண்டும். இதற்கு கட்டாயமாக கல்வி அறிவு வேண்டும்.
எந்த துறையிலும் ஆண்களை போல பெண்களும் மிக வலிமையுடன் செயல்பட முடியும். 80 சதவீத பெண்கள் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். 10 சதவீத மக்கள் தான் நாட்டுக்காக உழைக்கிறார்கள்.
பெண்கள் ஒவ்வொரு நிமிடத்தையும் தங்கள் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும். உயர வேண்டும். சுயதொழில் புரிவதற்கு பெண்கள் முன்வர வேண்டும். தலைமை பொறுப்பை ஏற்று நிறுவனங்களை நடத்த வேண்டும்.
பெண்கள் மீதான வன்கொடுமைகள் மற்றும் பாலியல் தொந்தரவு இன்னும் சமுதாயத்தில் நிலவி வருகிறது. இதனை ஒழிக்க பெண்கள் தான் முன்வரவேண்டும் என்றார்.
தொடர்ந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது மோடியின் ஆட்சி குறித்த கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடியின் 100 நாள் ஆட்சியில் பல நல்ல திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
சாதாரணமானவர்களும் மின்னஞ்சல் மூலம் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment