Saturday, September 20, 2014
பொள்ளாச்சி பகுதியில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங் கள், ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங் களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு
தமிழகம் முழுவதும் காலி யாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று முன்தினம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பொள் ளாச்சி வட்டார பகுதியில் காலியாக உள்ள 10 இடங்களுக்கு நேற்று முன்தினம் அமைதியாக வாக்குப்பதிவு நடந்தது.
கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் 12–வது வார்டில் 71 சதவீத வாக்குகளும், கோட்டூர் பேரூராட்சி 16–வது வார்டில் 82.5 சதவீத ஓட்டுகளும், வேட் டைக்காரன்புதூர் பேரூராட்சி 9–வது வார்டில் 87 சதவீத வாக்குகளும் பதிவாகின.
77.45 சதவீதம்
கோமங்கலம் ஊராட்சி 6–வது வார்டில் 81 சதவீதமும், பில் சின்னாம்பாளையம் ஊராட்சி 6–வது வார்டில் 89 சதவீதமும், பெத்தநாயக்கனூர் ஊராட்சி 7–வது வார்டில் 69 சதவீதமும், 9–வது வார்டில் 57 சதவீதமும், கரியாஞ்செட்டிபாளையம் ஊராட்சி 2–வது வார்டில் 81 சதவீதமும், சூலக்கல் ஊராட்சி 3–வது வார்டில் 79 சதவீதமும், தேவ ணாம்பாளையம் ஊராட்சி 8–வது வார்டில் 78 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன. பொள்ளாச்சி வட்டார பகு தியில் 10 இடங்களுக்கு நடந்த இடைத்தேர்தலில் மொத்தம் 77.45 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப்பெட்டிகள், மின்னணு வாக்குப்பதிவு எந்தி ரங்கள் பூட்டி சீல் வைக்கப் பட்டன. ஊராட்சிகளில் நடைபெற்ற தேர்தலுக்கான ஓட்டுப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகம், ஆனைமலை ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் ஓட்டுப் பெட்டிகளும், கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வேட்டைக்காரன்புதூர் பேரூ ராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் மின்னணு வாக் குப்பதிவு எந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளன.
ஓட்டுப்பெட்டிகள், மின் னணு வாக்குப்பதிவு எந்தி ரங் கள் வைக்கப்பட்டுள்ள அறை கள் பூட்டி சீல் வைக்கப் பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள் ளது. 24 மணி நேரமும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார் கள்.
பதிவான ஓட்டுகள் அந்தந்த மையங்களில் வருகிற 22–ந் தேதி எண்ணப்படுகின்றன. அன்று மாலைக்குள் முடிவுகள் தெரிந்து விடும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
0 comments:
Post a Comment