Friday, September 05, 2014
மதுரை: தலித்துகள் பற்றி அவதூறாக பேட்டி அளித்த வழக்கில்
சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் கி.ரா என்கிற ராஜநாராயணன்
நேரில் ஆஜராக மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த கதிரேசன் என்பவர் மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், வார பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த, எழுத்தாளர் ராஜநாராயணன், வட்டார மொழி சம்பந்தமாக அதிகம் எழுதியது குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், உழைப்பாளர்கள் மற்றும் அடிதட்டு மக்கள், பட்டியல் இனத்தவர்கள் குறித்து எதுவும் எழுதவில்லையா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள ராஜநாராயணன், அடித்தட்டு மக்களின் நிலை குறித்து அதிகம் எழுதியிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
ஆனால், தலித் மக்களை பற்றி எழுதாதது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள ராஜநாராயணன், அவர்கள் வரலாறை அவர்கள் எழுதுவார்கள். அவர்கள் பேசும் மொழி பல்வேறு விதமாக இருக்கிறது. அந்த மொழி குறித்து எனக்கு எழுத தெரியாது. பசுவுக்கும், எருமைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு என்று இழிவாக பேட்டி அளித்துள்ள அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, நீதிமன்றம் உத்தரவின்பேரில் அவர் மீது தீண்டாமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அக்டோபர் 11ஆம் தேதி எழுத்தாளர் ராஜநாராயணன் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.
மதுரையை சேர்ந்த கதிரேசன் என்பவர் மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், வார பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த, எழுத்தாளர் ராஜநாராயணன், வட்டார மொழி சம்பந்தமாக அதிகம் எழுதியது குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், உழைப்பாளர்கள் மற்றும் அடிதட்டு மக்கள், பட்டியல் இனத்தவர்கள் குறித்து எதுவும் எழுதவில்லையா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள ராஜநாராயணன், அடித்தட்டு மக்களின் நிலை குறித்து அதிகம் எழுதியிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
ஆனால், தலித் மக்களை பற்றி எழுதாதது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள ராஜநாராயணன், அவர்கள் வரலாறை அவர்கள் எழுதுவார்கள். அவர்கள் பேசும் மொழி பல்வேறு விதமாக இருக்கிறது. அந்த மொழி குறித்து எனக்கு எழுத தெரியாது. பசுவுக்கும், எருமைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு என்று இழிவாக பேட்டி அளித்துள்ள அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, நீதிமன்றம் உத்தரவின்பேரில் அவர் மீது தீண்டாமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அக்டோபர் 11ஆம் தேதி எழுத்தாளர் ராஜநாராயணன் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
0 comments:
Post a Comment