Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
ஆனைமலை அருகே உள்ள சேத்துமடையை சேர்ந்தவர் தியாகு விவசாயி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் இருந்து ரூ.35 ஆயிரம் மதிப்பிலான செல்போன் உள்பட சில பொருட்கள் திருட்டு போயின. இது குறித்து தியாகு ஆனைமலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன் உள்பட பொருட்களை திருடிய நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் செல்போனில் உள்ள ரகசிய குறியீட்டு எண் மூலம் அதனை திருடிய நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார் கள். விசாரணையில் அந்த அவர் திருப்பூர் மாவட்டம் வேலாம்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது 23) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் செல்போன் திருடியதாக அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments: