Saturday, September 20, 2014
நாகர்கோவிலில் பேராசிரியர் வீட்டில் கதவை உடைத்து டி.வி. உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதுபற்றிய விவரம் வருமாறு:–
பேராசிரியர்
நாகர்கோவில் கல்லூரி ரோடு நீல் தெருவைச் சேர்ந்தவர் ஸ்டாலின் ஜேக்கப். இவருடைய மனைவி ஜெனிபர். இவர்கள் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி பேராசிரியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.
இவர்கள் நேற்று முன்தினம் மாலை தக்கலை கல்குறிச்சி பகுதியில் உள்ள ஜெனிபரின் தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று காலை இவர்களது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக பக்கத்து வீட்டினர் மூலம் தகவல் கிடைத்தது.
கொள்ளை
இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்டாலின் ஜேக்கப் அங்கிருந்து நாகர்கோவிலுக்கு விரைந்து வந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. எல்.இ.டி. டி.வி., டி.வி.டி. பிளேயர், ஹோம் தியேட்டர் உள்ளிட்ட சில பொருட்களை காணவில்லை. பீரோவும் திறந்து கிடந்தது. பீரோவில் நகை, பணம் எதுவும் இல்லாததால் வேறெதுவும் திருட்டு போகவில்லை.
வீடு பூட்டிக்கிடந்ததைப் பார்த்து யாரோ மர்ம மனிதர்கள் சுத்தியலால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய சுத்தியல் அருகில் கிடந்தது.
இந்த கொள்ளை பற்றி வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் சென்று ரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளையர்கள் யார்? என்பது குறித்து வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.30 ஆயிரம் என போலீஸ் தரப்பில் கணக்கிடப்பட்டு உள்ளது. இக்கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ஆம்லெட்‘ சாப்பிட்ட கொள்ளையர்கள்
கொள்ளை நடந்த பேராசிரியர் வீட்டில் கொள்ளையர்கள் மிகவும் சாவகாசமாக கொள்ளையடித்துள்ளனர். கதவை உடைத்து உள்ளே சென்ற அவர்களுக்கு மிகவும் பசித்துவிட்டது போலும். இதனால் வீட்டில் இருந்த முட்டைகளை எடுத்து ‘ஆம்லெட்‘ போட்டு சாப்பிட்டுள்ளனர். மேலும் குளிர்சாதன பெட்டியில் இருந்த பாலை எடுத்து காய்ச்சி குடித்துள்ளனர். கொள்ளையர்களில் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த பழக்கம் உள்ள கொள்ளையர்களை போலீசார் குறி வைத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி: ஒப்பந்த பணிகளுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரி திருச்சியில் ரயில்வே ஒப்பந்ததாரர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ப...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
0 comments:
Post a Comment