Thursday, September 18, 2014
வத்தலக்குண்டுவில் ஆசைக்கு இணங்க மறுத்த கர்ப்பிணி பெண்ணை கொலை செய்த கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கருத்து வேறுபாடு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகரைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் மாலதி. இவருக்கும் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த முத்துராமன் என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நந்தினி என்ற மகள் இருக்கிறாள். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இரண்டு பேரும் பிரிந்து விட்டனர்.
மாலதி வத்தலக்குண்டுவில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் பாண்டியன் வீட்டுக்கு அருகே பண்ணைக்காட்டை சேர்ந்த மணிகண்டபிரபு (வயது 38) என்பவர் வாடகை வீட்டில் குடியிருக்க வந்தார். இவரும் திருமணம் ஆகி மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றவர். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மணிகண்டபிரபு வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.
மீண்டும் திருமணம்
இந்த நிலையில் மாலதி கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததால் அவரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பாண்டியனிடம், மணிகண்டபிரபு கேட்டுக் கொண்டார். இதையொட்டி மணிகண்டபிரபுவுக்கும், மாலதிக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்கள் இரண்டுபேரும் பாண்டியன் வீடு அருகிலேயே குடியிருந்து வந்தனர். தற்போது மாலதி 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். மாலதி ஆன்மீகத்தில¢ அதிக ஈடுபாடு உள்ளவர் என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது அவர் கோவிலுக்கு செல்வதற்காக விரதம் இருந்து வந்தார்.
கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் மாலதியை ஆசைக்கு இணங்குமாறு மணிகண்டபிரபு வற்புறுத்தி உள்ளார். மாலதி கோவிலுக்கு விரதம் இருந்து வந்ததாலும், அருகில் 11 வயது மகள் நந்தினி தூங்கிக் கொண்டு இருந்ததாலும் அவர் கணவரின் அழைப்பை நிராகரித்தார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டபிரபு வீட்டில் இருந்த போர்வையால் மாலதி முகத்தை மூடி மூச்சு த்திணற வைத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
நேற்று காலையில் பாண்டியன் தனது மகளை பார்ப்பதற்காக மாலதி வீட்டுக்கு சென்றார். ஆனால் அவரது வீடு பூட்டிக் கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பாண்டியன் பக்கத்து வீட்டுக் காரர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது மாலதி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது தெரியவந்தது. மேலும் அவரது மகள் நந்தினி அருகில் தூங்கிக் கொண்டிருந்தாள்.
பரபரப்பு
இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோஜி, சப்-இன்ஸ¢பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் விரைந்து சென்று மாலதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள மணிகண்டபிரபுவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வத்தலக்குண்டுவில் கர்ப்பிணி பெண்ணை கணவரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கருத்து வேறுபாடு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகரைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் மாலதி. இவருக்கும் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த முத்துராமன் என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நந்தினி என்ற மகள் இருக்கிறாள். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இரண்டு பேரும் பிரிந்து விட்டனர்.
மாலதி வத்தலக்குண்டுவில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் பாண்டியன் வீட்டுக்கு அருகே பண்ணைக்காட்டை சேர்ந்த மணிகண்டபிரபு (வயது 38) என்பவர் வாடகை வீட்டில் குடியிருக்க வந்தார். இவரும் திருமணம் ஆகி மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றவர். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மணிகண்டபிரபு வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.
மீண்டும் திருமணம்
இந்த நிலையில் மாலதி கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததால் அவரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பாண்டியனிடம், மணிகண்டபிரபு கேட்டுக் கொண்டார். இதையொட்டி மணிகண்டபிரபுவுக்கும், மாலதிக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்கள் இரண்டுபேரும் பாண்டியன் வீடு அருகிலேயே குடியிருந்து வந்தனர். தற்போது மாலதி 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். மாலதி ஆன்மீகத்தில¢ அதிக ஈடுபாடு உள்ளவர் என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது அவர் கோவிலுக்கு செல்வதற்காக விரதம் இருந்து வந்தார்.
கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் மாலதியை ஆசைக்கு இணங்குமாறு மணிகண்டபிரபு வற்புறுத்தி உள்ளார். மாலதி கோவிலுக்கு விரதம் இருந்து வந்ததாலும், அருகில் 11 வயது மகள் நந்தினி தூங்கிக் கொண்டு இருந்ததாலும் அவர் கணவரின் அழைப்பை நிராகரித்தார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டபிரபு வீட்டில் இருந்த போர்வையால் மாலதி முகத்தை மூடி மூச்சு த்திணற வைத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
நேற்று காலையில் பாண்டியன் தனது மகளை பார்ப்பதற்காக மாலதி வீட்டுக்கு சென்றார். ஆனால் அவரது வீடு பூட்டிக் கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பாண்டியன் பக்கத்து வீட்டுக் காரர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது மாலதி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது தெரியவந்தது. மேலும் அவரது மகள் நந்தினி அருகில் தூங்கிக் கொண்டிருந்தாள்.
பரபரப்பு
இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோஜி, சப்-இன்ஸ¢பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் விரைந்து சென்று மாலதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள மணிகண்டபிரபுவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வத்தலக்குண்டுவில் கர்ப்பிணி பெண்ணை கணவரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...

0 comments:
Post a Comment