Friday, September 19, 2014
திருப்பூர்:மூன்று
ஆண்டுகளாக விண்ணபித்தும், குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தும் விதவை உதவி
தொகை கிடைக்காததால், மனமுடைந்த விதவை பெண், நேற்று தனது நான்கு
குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார். திருப்பூர்
காங்கயம் ரோடு பூலவாரி சுகுமார் நகரை சேர்ந்தவர் பானுமதி (30). இவரது கணவர்
முருகன். இவர்களுக்கு சபரீஸ் (13), முத்துமார் (10) என்ற இரண்டு
மகன்களும், அங்குலட்சுமி (8), சீதாலட்சுமி (4) என்ற இரண்டு மகள்களும்
உள்ளனர். இந்நிலையில்Êசமையல் தொழில் செய்து வந்த முருகன் கடந்த மூன்று
ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதையடுத்து,
நான்கு குழந்தைகளுடன் அதே பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்ற
பானுமதி, பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து கொண்டு, தனது குழந்தைகளை
வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், பானுமதி குடும்ப சூழ்நிலை காரண மாக கடந்த மூன்று ஆண்டுகளாக விதவை உதவி தொ கை கேட்டு விண்ணப்பித்து வருகிறார். ஆனால், இதுவ ரை அவருக்கு விதவை உதவி தொகை கிடைக்க பெறவி ல்லை. இதையடுத்து, கலெக் டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக் கள் குறைதீர் கூட்டத்திலும், பலமுறை கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். ஆனாலும், இதுவரை அவருக்கு விதவை உதவி தொகை கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மனமுடைந்து போன பானுமதி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு தனது நான்கு குழந்தைகளுடன், அவரது தந்தை அய்யாசாமியையும் அ¬ ழத்து கொண்டு கலெக்டர் கோவிந்தராஜிடம் மனு அளிக்க வந்திருந்தார்.
இதுகுறித்து பானுமதி கூறுகையில், எனது கணவர் இறந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.
நான்கு குழந்தைகளையும் வளர்ப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனது பெற்றோர் உதவியுடன் அவர்களை கஷ்டப்பட்டு வளர்த்து வருகி றேன். நான்கு குழந்தைகளும் பூலவாரி சுகுமார் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக விதவை உதவி தொகை கேட்டு விண்ணப்பித்து வருகிறேன். இதுவரை அதற் கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கவில்லை.
இன்று (நேற்று) ஏழாவது முறையாக கலெக்டரிடம் மனு கொடுக்க வந்துள்ளேன். இந்த முறை யாவது கலெக்டர் நடவடிக்கை எடுத்து, எனக்கு விதவை உதவி தொ கை கிடைக்க உதவ வேண்டும் என்பதற்காக தான் எனது நான்கு குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளேன் என்றார்.
இந்நிலையில், பானுமதி குடும்ப சூழ்நிலை காரண மாக கடந்த மூன்று ஆண்டுகளாக விதவை உதவி தொ கை கேட்டு விண்ணப்பித்து வருகிறார். ஆனால், இதுவ ரை அவருக்கு விதவை உதவி தொகை கிடைக்க பெறவி ல்லை. இதையடுத்து, கலெக் டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக் கள் குறைதீர் கூட்டத்திலும், பலமுறை கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். ஆனாலும், இதுவரை அவருக்கு விதவை உதவி தொகை கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மனமுடைந்து போன பானுமதி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு தனது நான்கு குழந்தைகளுடன், அவரது தந்தை அய்யாசாமியையும் அ¬ ழத்து கொண்டு கலெக்டர் கோவிந்தராஜிடம் மனு அளிக்க வந்திருந்தார்.
இதுகுறித்து பானுமதி கூறுகையில், எனது கணவர் இறந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.
நான்கு குழந்தைகளையும் வளர்ப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனது பெற்றோர் உதவியுடன் அவர்களை கஷ்டப்பட்டு வளர்த்து வருகி றேன். நான்கு குழந்தைகளும் பூலவாரி சுகுமார் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக விதவை உதவி தொகை கேட்டு விண்ணப்பித்து வருகிறேன். இதுவரை அதற் கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கவில்லை.
இன்று (நேற்று) ஏழாவது முறையாக கலெக்டரிடம் மனு கொடுக்க வந்துள்ளேன். இந்த முறை யாவது கலெக்டர் நடவடிக்கை எடுத்து, எனக்கு விதவை உதவி தொ கை கிடைக்க உதவ வேண்டும் என்பதற்காக தான் எனது நான்கு குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளேன் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment