Friday, September 05, 2014
மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–
1986–ம் ஆண்டிலிருந்து ஆசிய யானைகளின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது. யானைகள் காடுகளில் 18 மணி நேரம் வரை உணவு தேடி அலையும். சுமார் 70 வயது வரை வாழும். கோவில், வீடுகளில் யானைகளை கான்கிரீட் தரையில் அடைத்து வைத்து நடக்கவிடாமல் வளர்க்கின்றனர்.
இந்தியாவில் யானைகளை பழக்குவது, வணிக ரீதியாக பயன்படுத்துவது நீண்ட காலமாக தொடர்கிறது. தற்போது அதிகாரிகளின் கவனக்குறைவால் அவை துன்புறுத்தப்படுகிறது. இதனால் யானைகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றன. காட்டில் தனது குடும்பத்துடன் வாழும் யானைகளை கோவிலில் தனியாக அடைத்து வைப்பதால் பாதிப்பு ஏற்படுகிறது.
யானைகள் 10 வயது வரையில் குட்டிகளுக்கு பால் கொடுக்கும். ஆனால் குட்டிகளை உடனடியாக தாயிடம் இருந்து பிரித்து பயிற்சி என்ற பெயரில் துன்புறுத்துகின்றனர். யானைகள் துன்புறுத்தல் பெரும்பாலும் கோவில் திருவிழாக்களில் அவற்றை உட்கார விடாமல் நீண்ட நேரம் நிற்க வைப்பது, தேவையான உணவு கொடுக்காதது, வெயிலில் இருக்கச்செய்தல், அலங்காரம் என்ற பெயரில் அதிக எடையுள்ள பொருட்களை அவற்றின் மீது சுமத்துவது என பல வகைகளிலும், சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரிலும் கொடுமைப் படுத்துகின்றனர். இதனால் சில யானைகள் மிரண்டு தாக்கிய சம்பவமும் நடந்துள்ளது.
ஆசிய யானைகள் அழியும் நிலையில் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதுகுறித்து அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே கோவில் மற்றும் வீடுகளில் உள்ள யானைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு அமைக்க வேண்டும். கோவில் மற்றும் வீடுகளில் யானைகள் வளர்க்கவும், வைத்திருக்கவும் தடை விதிக்க வேண்டும். யானை வளர்க்க யாருக்கும் புதிதாக லைசென்ஸ் (உரிமம்) வழங்கக்கூடாது என உத்தர விட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகா தேவன் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வக்கீல்கள் லஜபதிராய், திருமுருகன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
மனு குறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர், வனத்துறை முதன்மை செயலாளர், இந்து அறநிலையத்துறை முதன்மை செயலாளர் மற்றும் கமிஷனர், முதன்மை வனப் பாதுகாவலர், விலங்கின வதை தடுப்பு நல அமைப்பு உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்
1986–ம் ஆண்டிலிருந்து ஆசிய யானைகளின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது. யானைகள் காடுகளில் 18 மணி நேரம் வரை உணவு தேடி அலையும். சுமார் 70 வயது வரை வாழும். கோவில், வீடுகளில் யானைகளை கான்கிரீட் தரையில் அடைத்து வைத்து நடக்கவிடாமல் வளர்க்கின்றனர்.
இந்தியாவில் யானைகளை பழக்குவது, வணிக ரீதியாக பயன்படுத்துவது நீண்ட காலமாக தொடர்கிறது. தற்போது அதிகாரிகளின் கவனக்குறைவால் அவை துன்புறுத்தப்படுகிறது. இதனால் யானைகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றன. காட்டில் தனது குடும்பத்துடன் வாழும் யானைகளை கோவிலில் தனியாக அடைத்து வைப்பதால் பாதிப்பு ஏற்படுகிறது.
யானைகள் 10 வயது வரையில் குட்டிகளுக்கு பால் கொடுக்கும். ஆனால் குட்டிகளை உடனடியாக தாயிடம் இருந்து பிரித்து பயிற்சி என்ற பெயரில் துன்புறுத்துகின்றனர். யானைகள் துன்புறுத்தல் பெரும்பாலும் கோவில் திருவிழாக்களில் அவற்றை உட்கார விடாமல் நீண்ட நேரம் நிற்க வைப்பது, தேவையான உணவு கொடுக்காதது, வெயிலில் இருக்கச்செய்தல், அலங்காரம் என்ற பெயரில் அதிக எடையுள்ள பொருட்களை அவற்றின் மீது சுமத்துவது என பல வகைகளிலும், சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரிலும் கொடுமைப் படுத்துகின்றனர். இதனால் சில யானைகள் மிரண்டு தாக்கிய சம்பவமும் நடந்துள்ளது.
ஆசிய யானைகள் அழியும் நிலையில் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதுகுறித்து அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே கோவில் மற்றும் வீடுகளில் உள்ள யானைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு அமைக்க வேண்டும். கோவில் மற்றும் வீடுகளில் யானைகள் வளர்க்கவும், வைத்திருக்கவும் தடை விதிக்க வேண்டும். யானை வளர்க்க யாருக்கும் புதிதாக லைசென்ஸ் (உரிமம்) வழங்கக்கூடாது என உத்தர விட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகா தேவன் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வக்கீல்கள் லஜபதிராய், திருமுருகன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
மனு குறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர், வனத்துறை முதன்மை செயலாளர், இந்து அறநிலையத்துறை முதன்மை செயலாளர் மற்றும் கமிஷனர், முதன்மை வனப் பாதுகாவலர், விலங்கின வதை தடுப்பு நல அமைப்பு உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...
0 comments:
Post a Comment