Tuesday, September 30, 2014
ஆப்கானிஸ்தானில் அதிபர் ஹமீத் கர்காயின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய அதிபராக அஷ்ரப் கனி பதவி ஏற்கிறார்.
ஆப்கானிஸ்தானில் அதிரபராக இருக்கும் ஹமீத் கர்காயின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து ஜனநாயக முறையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிபர் தேர்தல் நடந்தது.
அந்தத் தேர்தலில் அஷ்ரப் கனி மற்றும் அப்துல்லா அப்துல்லா ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் அஷ்ரப் கனி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதை அப்துல்லா அப்துல்லா ஏற்கவில்லை. இதனால் தேர்தல் அதிகாரபூர்வமாக அறிவிக்க முடியாமல் இழுபறி நிலை நீடித்தது.
இந்நிலையில் தற்போதைய அதிபர் கர்சாய் முன்னிலையில் அவர்கள் இருவரும் இடையில் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி அஷ்ரப் கனி அதிபராகவும், அப்துல்லா அப்துல்லா பிரதமராகவும் நியமனம் செய்யப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, புதிய அதிபராக அஷ்ரப் கனி பதவி ஏற்கிறார். இவருடன் 100 உயர் அதிகாரிகளும் பதவி ஏற்கின்றனர். பதவி ஏற்பு நிகழ்ச்சி தலைநகர் காபூலில் நடைபெறுகிறது.
அதிபராகப் பதவி ஏற்கும் அஷ்ரப் கனி மற்றும் அப்துல்லா அப்துல்லா இருவரும் தலிபான் எதிர்ப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...
0 comments:
Post a Comment