Friday, September 26, 2014

On Friday, September 26, 2014 by Unknown in ,    
மதுரையில் சட்டக்கல்லூரி மாணவி இன்று உண்ணாவிரதம்
மதுரையில் இன்று சட்டக் கல்லூரி மாணவி நந்தினி பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந் தார்.
மதுரை சட்டக்கல்லூரியின் 2–ம் ஆண்டு மாணவி நந்தினி. இவர் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி அடிக்கடி போராட்டம் நடத்தி வருகிறார். இதற்காக பலமுறை கைதும் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று சட்டக்கல்லூரி வளாகத்தில் அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். பூரண மது விலக்கை வருகிற 2–ந் தேதிக்குள் அமுல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி வரும் மாணவி நந்தினியை சக மாணவ–மாணவிகள் பாராட்டினர்.

0 comments: