Tuesday, September 30, 2014
உடுமலை ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்டராக்ட் மற்றும் இண்டராக்ட் சங்கங்கள் தொடக்க விழா உடுமலை ஐஸ்வர்யா நகரில் உள்ள இந்திய மருத்துவ சங்க கட்டிட ஹாலில் நடந்தது. விழாவிற்கு ரோட்டரி சங்க மாவட்ட ஆளுனர் ஸ்ரீதரன்நம்பியார் தலைமை தாங்கினார். விழாவில் ஸ்ரீ ஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் கல்லூரி ரோட்டராக்ட் சங்கம், உடுமலை அரசு கலைக்கல்லூரி ரோட்டராக்ட் சங்கம், மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர்.கல்லூரி ரோட்டராக்ட் சங்கம், ஸ்ரீ ஜி.வி.ஜி மேல்நிலைப்பள்ளி இண்ட்ராக்ட் சங்கம், வித்யநேத்ரா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி இண்ட்ராக்ட் சங்கம், ஸ்ரீ ஆதர்ஷ் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி இண்ட்ராக்ட் சங்கம், செப்பைரஸ் பள்ளி இண்ட்ராக்ட் சங்கம் ஆகிய சங்கங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.
இந்த சங்க நிர்வாகிகளுக்கு ரோட்டரி சங்க மாவட்ட ஆளுனர் ஸ்ரீதரன்நம்பியார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவரிடம் ஜம்முகாஷ்மீர் வெள்ள நிவாரண தொகையாக வித்யநேத்ரா மற்றும் செப்ரைஸ் இண்ட்டராக்ட் சங்கம் ரூ.1லட்சத்து 16ஆயிரத்து 600–ம், ஸ்ரீ ஆதர்ஷ் பள்ளி இண்ட்ராக்ட் சங்கம் ரூ.1லட்சத்து 13 ஆயிரத்து 380–ம், சைனிக் பள்ளி இன்ட்ராக்ட் சங்கம் ரூ.5ஆயிரம், ஸ்ரீ ஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் கல்லூரி ரோட்டராக்ட் சங்கம் ரூ.45 ஆயிரமும், காந்திநகர் ரோட்டராக்ட் சங்கம் ரூ.25ஆயிரம், உடுமலை ரோட்டரி சங்கம் ரூ.1 லட்சத்து ஆயிரத்து 100 வழங்கியது. விழாவில் ரோட்டர் சங்க மாவட்ட செயலாளர்கள் டி.ஜெகதீசன், வக்கீல் மோகன்ராஜ், ஸ்ரீ.ஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் கல்லூரி முதல்வர் ஜி.சுகுணா, ரோட்டராக்ட் இளைஞர் பிரிவு தலைவர் ஆர்.அருண்கார்த்திக், உடுமலை ரோட்டரி சங்க தலைவர் தேவசிகுட்டி ஜோஸ், ரோட்டரி மாவட்ட துணை ஆளுனர் டி.ரத்தினவேல் ஆகியோர் பேசினர். முடிவில் சங்க செயலாளர் ஆடிட்டர் எஸ்.சிவப்பிரகாஷ் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment