Thursday, September 11, 2014
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
மத்திய அரசின் புள்ளியியல்துறை 2012–13–ம் ஆண்டு இந்தியாவிலுள்ள மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது என்பது தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்களாக கருதப்படும் மாநிலங்கெல்லாம் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி வருகின்றன. ஆனால் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிய தமிழ்நாடு கடைசி இடத்திற்கு சென்றுள்ளது.
இந்தியாவின் சராசரி பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதம் ஆகும். ஆனால் இந்த சராசரியைவிட தமிழ்நாடு, பொருளாதார வளர்ச்சியில் 3.39 சதவீதம் என்று குறைந்துள்ளது. தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி குறைந்ததற்கு கடுமையான மின்வெட்டு, எளிதில் அணுக முடியாத நிர்வாகம், தொழில் தொடங்கு வோருக்கு பல்வேறு நிர்பந் தங்கள் போன்ற காரணங்களால்தான் தொழில்துறை நலிவுற்று பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
நேற்று டெல்லியில் அனைத்து மாநில மின்துறை அமைச்சர்கள் கூட்டம் நடை பெற்றது. அங்கே சென்று தமிழ்நாட்டில் நிலவிவரும் மின்வெட்டு பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டி தமிழக அரசின் மின்துறை அமைச்சரோ தூத்துக்குடியில் மேயர் தேர்தல் பணிகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையை பார்த்த பிறகு தொழிலதிபர்கள், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க எப்படி முன்வருவார்கள். மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தி இருந்தால், நம் தமிழகம் உண்மையான வளர்ச்சியை கண்டிருக்கும்.
தமிழகத்தின் உண்மை நிலையை மத்திய அரசின் புள்ளியியல் துறை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளதை, இனியும் தமிழக மக்களிடம் மறைக்க முடியாது. எனவே இனியாவது தொழில்துறை வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை எடுத்து, பொருளாதார வளர்ச்சியில் கடைகோடியில் இருக்கும் தமிழகத்தை வளர்ச்சி பெறும் மாநிலமாக மாற்ற முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment