Thursday, October 16, 2014
நரைய்னியா கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் மாணவர்களிடம், மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். அப்போது 7-ம் வகுப்பு படித்துவந்த 13 வயது மாணவி 6 மாதம் கர்ப்பமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவ குழுவினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, போலீசார் பாதிக்கப்பட்ட மாணவியை உடனடியாக அருகே இருந்த சர்தார் மருத்துவமனைக்கு கூடுதல் பரிசோதனைக்கு அழைத்து சென்றனர் என்று மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அனில் குமார் சிங் தெரிவித்துள்ளார். இதற்கிடையே மாணவியின் பெற்றோர்கள் அளித்துள்ள தகவலின்படி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக ராம் பிரசாத் என்பவருக்கு எதிராக பெண்கள் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் தெரிக்கப்பட்டுள்ள நபர் கிராமத்தில் கடை ஒன்றை நடத்தி வருகிறார் என்றும் அவர் சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற, ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ...
-
புதுப்பட சிடிக்கள் விற்ற 2 பேர் கைது கரூரில் புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்...
-
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஸ்குவாஷ் அணியினருடன் பயிற்சியாளர் சைரஸ் போஞ்சா, ஸ்காட்லாந்துக்கு செல்லாததால் வீரர், வீராங்கனைகள் ...
-
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை ...
-
திருச்சி 11.12.15 திருச்சி உங்களுடன் அமைப்பு சார்பாக இன்று ஊர்காவல் படை ரோட்டரி இன்னர்வீல் லயன்எக்ஸ்னோரா தமிழ்நாடு வியாபாரிகள் சங...
-
வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பல்வேறு பகுதியில் பெய்து வருகிறது கடந்த 23.11.2015 அன்று பெய்த கனமழையின் காரணமாக தூத்து...
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என முஸ்லிம் லீக...
0 comments:
Post a Comment