Friday, October 03, 2014

On Friday, October 03, 2014 by Unknown in ,    
திருமங்கலம் பெரியார் நகரை சேர்ந்தவர் எஸ்தர் ஏஞ்சலினா கிறிஸ்டி. இவர் வீட்டை பூட்டிவிட்டு பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். பெங்களூரில் இருந்து அவரது அண்ணன் வில்பிரட் பிராங்கோலீசிடம் போனில் இன்ஸ்சூரன்ஸ் கட்ட வேண்டியுள்ளது என்று ஞாபகபடுத்தினாராம்.
உடனே வில்பரட் தங்கை வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்றதும் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5¼ பவுன் நகைகள் மற்றும் எல்.ஐ.சி. பாண்டு மற்றும் பாங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆர்.சி. புத்தகம் ஆகியவை திருடு போயிருந்தது.
உடனே திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் ஜாஸ்மின் வசந்தராணி வழக்குப்பதிவு செய்து பூட்டிய வீட்டில் திருடிய ஆசாமிகளை தேடி வருகிறார்.

0 comments: