Friday, October 03, 2014

On Friday, October 03, 2014 by Unknown in ,    
திருப்பரங்குன்றம், அக்.1:  அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுதலைபெற ஜெயலலிதா பேரவை சார்பில் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை சிறப்பு வழிபாடும், அங்கப்பிரதட்சணமும் நடைபெற்றன.
பேரவை ஒன்றியச் செயலர் எஸ்.முனியாண்டி தலைமையில் நடைபெற்ற வழிபாட்டில் மாவட்ட ஊராட்சித் தலைவர் எம்.தர்மராஜ், நகரச் செயலர்கள் பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஹமிதாஅக்பர்அலி, நாகலெட்சுமி பாண்டுரங்கன், ஒன்றியச் செயலர்கள் இரா.சுப்பிரமணி, கீழக்குயில்குடி பாண்டி, வீரமணி, பசுமலை கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஐ.பி.எஸ்.பாலமுருகன், பேரவை முன்னாள் மாவட்டச் செயலர்கள் எஸ்.எஸ்.டி.மனோகரன், கோ.பாரி, தொழிற்சங்க செயலர்கள் பி.எம்.முருகன், குமரவேல், கருத்தப்பாண்டி, முன்னாள் கவுன்சிலர் சுமதிமதி, ஊராட்சித்  தலைவர்கள் கருத்தக்கண்ணன், சிவகாமி முத்துராமன், கிளைச்செயலர் கே.மாயி, மின்வாரிய கூட்டுறவு சங்க தலைவர் வேல்ராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருநகரில் உருவபொம்மை எரிப்பு: ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்த திமுக பொதுச் செயலர் அன்பழகன், தலைவர் கருணாநிதி, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரின் உருவபொம்மை எரிப்பு திருநகர் இரண்டாவது பேருந்து நிறுத்தம் பகுதியில் நகர் செயலர் என்.எஸ்.பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஊராட்சி செயலர் பாலமுருகன், பேரவைச் செயலர் சீனிவாசன், கூட்டுறவு சங்க துணைத் தலைவர் மணி, மாணவரணி செயலர் சசிக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

0 comments: