Friday, October 03, 2014
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பூதிப்புரத்தை சேர்ந்தவர்
வீரணன். இவரது மனைவி தேனம்மாள். இவர்களது மகள் விமலாதேவி (வயது21).
ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள இவருக்கும் வேறு சமூகத்தை சேர்ந்த
திலீப்குமார் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விமலாதேவி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவரை கடத்தி சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் தன்னை யாரும் கடத்த வில்லை என விமலாதேவி போலீசில் தெரிவித்தார்.
அதன்பின்னர் பெற்றோருடன் விமலாதேவி அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் விமலாதேவி நேற்று முன்தினம் திடீரென இறந்தார். அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்த பெற்றோர் உறவினர்கள் உதவியோடு உடலை எரித்துவிட்டனர்.
இந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் செல்வம் போலீசில் புகார் செய்தார்.
தாசில்தார் கஜேந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபால்சாமி, துணை கண்காணிப்பாளர் சரவணக்குமார் ஆகியோர் விமலாதேவி உடல் எரிக்கப்பட்ட இடத்தில் விசாரணை நடத்தினர். அவர் தூக்குப்போட்டுதான் தற்கொலை செய்தாரா? அல்லது கவுரவக்கொலை நடந்துள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து விமலா தேவியின் பெற்றோரிடமும், உறவினர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இதில் முதல் கட்டமாக விமலாதேவியின் தந்தை வீரணன், தாய் தேனம்மாள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடை பெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விமலாதேவி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவரை கடத்தி சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் தன்னை யாரும் கடத்த வில்லை என விமலாதேவி போலீசில் தெரிவித்தார்.
அதன்பின்னர் பெற்றோருடன் விமலாதேவி அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் விமலாதேவி நேற்று முன்தினம் திடீரென இறந்தார். அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்த பெற்றோர் உறவினர்கள் உதவியோடு உடலை எரித்துவிட்டனர்.
இந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் செல்வம் போலீசில் புகார் செய்தார்.
தாசில்தார் கஜேந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபால்சாமி, துணை கண்காணிப்பாளர் சரவணக்குமார் ஆகியோர் விமலாதேவி உடல் எரிக்கப்பட்ட இடத்தில் விசாரணை நடத்தினர். அவர் தூக்குப்போட்டுதான் தற்கொலை செய்தாரா? அல்லது கவுரவக்கொலை நடந்துள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து விமலா தேவியின் பெற்றோரிடமும், உறவினர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இதில் முதல் கட்டமாக விமலாதேவியின் தந்தை வீரணன், தாய் தேனம்மாள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடை பெற்று வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருச்சி : மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டி : அக்டோர் 7ம் தேதி கூடுதல் மழை பெய்யும் என்பதால் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு எதிர்க...
-
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வா...
-
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். தமாக...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
திருச்சி_07.10.18 பருவமழையை காரணம் காட்டி தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காத தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது-வைக...
-
ஊதியூர் அருகே நொச்சிப்பாளையத்திலிருந்து நல்லிமடம் வழியாக, புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிராமச் சாலை வழியாக இந்தாண்டு பக்தர்கள் அச்சமின்றி பாதய...
0 comments:
Post a Comment