Monday, October 13, 2014
அமராவதி ஆற்றிலிருந்து கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான நீரை திறந்து விடாததால் காய்ந்து போன பயிர்களுடன் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் விசாயிகள் மனு.
அமராவதி ஆற்றின் கடைமடை பகுதியான கரூர் மாவட்டத்தில் சுமார் 50 கிலோமீட்டர் தூரம் கடந்து காவிரி ஆற்றில் கலக்கும் வகையில் உள்ள அமராவதி ஆற்று நீரை நம்பி ஆயிரக்கணக்கான பாசன ஏக்கர் நிலங்கள் உள்ளடக்கிய விவசாயிகள் உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகாலமாக வறட்சியினால் அமராவதி ஆறு வறண்டது, இருந்தும் கடந்த ஆண்டும், நடப்பாண்டிலும் அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணையின் நீர் மட்டம் சராரியாக சுமார் 80 அடி அளவு கொள்ளவு எட்டிய போதும், அமராவதி ஆற்றுநீரை நம்பியுள்ள கடமடை பகுதியான கரூர் விவசாயிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதோடு ஆற்றில் தண்ணீர் திறந்துவிடவில்லை. இதை கண்டித்து கடந்த மாதம் சின்னதாராபுரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் போரட்டம் நடத்தியதை அடுத்து இரு நாட்கள் மட்டும் தண்ணீர் திறந்து விட்டது. இதை நம்பி கரூர் விவசாயிகள் விவசாய பணிகள் மேற்கொண்டனர். தொடர்ந்து அமராவதி குறையவே பயிர்கள் கருக தொடங்கியது. தொடர்ந்து கரூர் பகுதிக்கு தேவையான தண்ணீர் திறக்க அமராவதி ஆற்று பாசன பொறியாளர்கள் புறக்கணித்து வருதாலும். திருப்பூர் மக்கள் மட்டும் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறந்து விடுவதாலும் இதனைகண்டித்து இன்று கரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 700 க்கும் மேற்பட்டடோர் ஒன்று திரண்டு காய்ந்து போன பயிர்களோடு மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். இது குறித்து கரூர் மாவட்ட நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாய சங்க செயலாளர் ராமலிங்கம் கூறும் போது, திருப்பூர் மாவட்ட அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி கரூர் விவசாயிகளுக்கு தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர். இதனால் 11 பழைய ஆயகட்டு கால்வாய்களை சார்ந்த விவசாயிகள் இன்று தற்கொலை செய்யும் முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே எங்களுக்கு உரிய நீரை வழங்காவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment