Monday, October 13, 2014
அமராவதி ஆற்றிலிருந்து கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான நீரை திறந்து விடாததால் காய்ந்து போன பயிர்களுடன் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் விசாயிகள் மனு.
அமராவதி ஆற்றின் கடைமடை பகுதியான கரூர் மாவட்டத்தில் சுமார் 50 கிலோமீட்டர் தூரம் கடந்து காவிரி ஆற்றில் கலக்கும் வகையில் உள்ள அமராவதி ஆற்று நீரை நம்பி ஆயிரக்கணக்கான பாசன ஏக்கர் நிலங்கள் உள்ளடக்கிய விவசாயிகள் உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகாலமாக வறட்சியினால் அமராவதி ஆறு வறண்டது, இருந்தும் கடந்த ஆண்டும், நடப்பாண்டிலும் அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணையின் நீர் மட்டம் சராரியாக சுமார் 80 அடி அளவு கொள்ளவு எட்டிய போதும், அமராவதி ஆற்றுநீரை நம்பியுள்ள கடமடை பகுதியான கரூர் விவசாயிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதோடு ஆற்றில் தண்ணீர் திறந்துவிடவில்லை. இதை கண்டித்து கடந்த மாதம் சின்னதாராபுரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் போரட்டம் நடத்தியதை அடுத்து இரு நாட்கள் மட்டும் தண்ணீர் திறந்து விட்டது. இதை நம்பி கரூர் விவசாயிகள் விவசாய பணிகள் மேற்கொண்டனர். தொடர்ந்து அமராவதி குறையவே பயிர்கள் கருக தொடங்கியது. தொடர்ந்து கரூர் பகுதிக்கு தேவையான தண்ணீர் திறக்க அமராவதி ஆற்று பாசன பொறியாளர்கள் புறக்கணித்து வருதாலும். திருப்பூர் மக்கள் மட்டும் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறந்து விடுவதாலும் இதனைகண்டித்து இன்று கரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 700 க்கும் மேற்பட்டடோர் ஒன்று திரண்டு காய்ந்து போன பயிர்களோடு மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். இது குறித்து கரூர் மாவட்ட நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாய சங்க செயலாளர் ராமலிங்கம் கூறும் போது, திருப்பூர் மாவட்ட அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி கரூர் விவசாயிகளுக்கு தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர். இதனால் 11 பழைய ஆயகட்டு கால்வாய்களை சார்ந்த விவசாயிகள் இன்று தற்கொலை செய்யும் முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே எங்களுக்கு உரிய நீரை வழங்காவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment