Wednesday, October 08, 2014
ஈரோடு எஸ்.எஸ்.பி. நகர் பகுதியில் காலி நிலத்தில் திடீரென்று நீரூற்று தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இடி விழுந்ததால் இந்த நீரூற்று தோன்றியதா? என்று அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.ஈரோடு மாநகராட்சி 14-வது வார்டு பகுதிக்கு உட்பட்டது எஸ்.எஸ்.பி. நகர். இங்கு ராசாம்பாளையம் ரோட்டில் ஒரு ஓடைப்பள்ளம் உள்ளது. இந்த பகுதியையொட்டி ஸ்டாலின் வீதி என்ற குடியிருப்பு பகுதி இருக்கிறது. வீடுகளுக்கு இடையே உள்ள காலி நிலத்தில் முள்செடிகள் வளர்ந்து காடுபோல் கிடக்கிறது.நேற்று முன்தினம் இரவு ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு அந்த பகுதியை சேர்ந்த ஜோதி என்ற பெண் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது அவரது வீட்டின் எதிரே உள்ள காலி நிலத்தில் கணுக்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது. ஆங்காங்கே தண்ணீர் குமிழ்விட்டு ஊற்றெடுத்துக்கொண்டிருந்தது. பொங்கி வழியும் தண்ணீர் அருகில் உள்ள ஓடை வழியாக வெளியேறிக் கொண்டிருந்தாலும் காலி இடத்தில் தேங்கி இருந்த தண்ணீர் கொஞ்சமும் குறையாமல் பெருகிக்கொண்டே இருந்தது.இதுபற்றி அவர் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். இந்த தகவல் பரவியதால் அந்த பகுதியை சேர்ந்த பலரும் அங்கு வந்து பார்த்தனர். ஒரு இடத்தில் மட்டும் இல்லாமல் அங்கு 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குமிழ் குமிழாக நீரூற்று தோன்றி இருந்தது.இடி விழுந்ததால் தான் இப்படி நீரூற்று ஏற்பட்டு இருக்கிறது என்ற தகவல் பரவியது. இதனால் பலரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இடி விழுந்ததால்தான் இந்த திடீர் நீரூற்று ஏற்பட்டதாக அந்த பகுதி மக்கள் கூறினார்கள். ஆனால் குடியிருப்பு பகுதியில் இடிவிழுந்ததா? இது தாழ்வான பகுதி என்பதால் உயர்ந்த பகுதியில் உள்ள வயல்வெளி தண்ணீர் ஊற்றெடுத்து உள்ளதா? என்பது பற்றி ஈரோடு தாசில்தார் அன்னபூரணி, துணை தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் பார்வையிட்டு சோதனை செய்து வருகிறார்கள்.
இடி விழுந்ததால்தான் இந்த திடீர் நீரூற்று ஏற்பட்டதாக அந்த பகுதி மக்கள் கூறினார்கள். ஆனால் குடியிருப்பு பகுதியில் இடிவிழுந்ததா? இது தாழ்வான பகுதி என்பதால் உயர்ந்த பகுதியில் உள்ள வயல்வெளி தண்ணீர் ஊற்றெடுத்து உள்ளதா? என்பது பற்றி ஈரோடு தாசில்தார் அன்னபூரணி, துணை தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் பார்வையிட்டு சோதனை செய்து வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...

0 comments:
Post a Comment