Wednesday, October 08, 2014
ஆசிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்திய ஆக்கியில் இடம் பெற்ற வீரரை முதல்–மந்திரி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
ஆசிய விளையாட்டு போட்டி தென்கொரியாவில் நடைபெற்றது. இதில் இந்திய ஆக்கி அணி வெற்றி பெற்றது. இந்த ஆக்கி அணியின் கோல் கீப்பராக கொச்சி பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த ஸ்ரீஜேஷ் (29) பணியாற்றினார்.
இதையடுத்து கேரள முதல்– மந்திரி உம்மன்சாண்டி, ஸ்ரீஜேஷ் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அவருடன், பென்னிபெகன் எம்.எல்.ஏ., உடன் இருந்தார்.
இது குறித்து முதல்–மந்திரி உம்மன்சாண்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஆசிய விளையாட்டு போட்டிகளில், இந்திய ஆக்கி அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீஜேஷின் பங்கு இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து உள்ளது. அவரை கேரள மக்கள் சார்பாக பாராட்டுகிறேன். இவரை போன்ற சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு கேரள அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். கேரள மாநில விளையாட்டு வீரர்களுக்கு இவர் முன் உதாரணமாக இருந்து வருகிறார். இவர், கேரள மாநில ஆக்கி அணி வீரர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment