Wednesday, October 15, 2014

திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடியில் கல்லுப்பட்டி மற்றும் காரியாபட்டி செல்லும் நெடுஞ்சாலைகள் உள்ளது. இந்த சாலைகள் மதுரை – தூத்துக்குடி மற்றும் மதுரை – கன்னியாகுமரி – கொல்லம் செல்லும் தேசிய சாலைகளை இணைக்கும் சாலையாக உள்ளது.
இதில் காரியாபட்டி செல்லும் சாலையில் ரெயில்வே கேட் இருந்தது. அதிக வாகனங்கள் சென்றதால் ரயில்வே கேட்டை அகற்றி விட்டு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. மழை பெய்யும் போது மழைநீர் தேங்காமல் இருக்க பக்கவாட்டில் துளை அமைக்கப்பட்டு அதன் வழியே மழைநீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டது. சரியான பராமரிப்பு இல்லாமல் மண் தேங்கி துளையை அடைத்துவிட்டது.
தற்போது கடந்த சில தினங்களாக மழை பெய்து முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி உள்ளது. அதில் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது தடுமாறி விழும் நிலை ஏற்படுகிறது. பள்ளம் இருப்பதை தெரிந்தவர்கள் ஓரமாக செல்கின்றனர். தண்ணீர் சற்று அதிகமாக இருக்கும் போது வாகனங்களின் புகை போக்கி வழியாக தண்ணீர் சென்று விடுகிறது. இதனால் வாகனம் ஓடாமல் நின்றுவிடுகிறது.
அப்போது இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் வாகனத்தை விட்டு இறங்கி தள்ளி செல்கின்றனர். சிலர் தண்ணீரீல் விழுந்து விடுகின்றனர். இந்த நிலையை போக்க ரெயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதையின் கீழ் உள்ள சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை ...
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என முஸ்லிம் லீக...
-
சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழா சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். வுளமான மண் இருந்தால் தான் நிலையான ம...
-
திருச்சி 14.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியி ; ல் டாக்டர் . அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு அரிஸ்டோ ரவுண...
-
திருச்சி 11.12.15 திருச்சி உங்களுடன் அமைப்பு சார்பாக இன்று ஊர்காவல் படை ரோட்டரி இன்னர்வீல் லயன்எக்ஸ்னோரா தமிழ்நாடு வியாபாரிகள் சங...
-
வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பல்வேறு பகுதியில் பெய்து வருகிறது கடந்த 23.11.2015 அன்று பெய்த கனமழையின் காரணமாக தூத்து...
-
கத்தி படத்தின் பாடல்கள் செப்டம்பர் மாதம் வெளிவருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், தற்போது படத்தின் பாடல்கள் குறித்து தனுஷ் ஒரு ...
-
நடிகர் மனோபாலா தயாரிப்பில், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிட உள்ள படம் சதுரங்க வேட்டை. இப்படத்தின் டிரைலரை இளையதளபதி வி...
0 comments:
Post a Comment