Friday, October 17, 2014
திருப்பூர் மாநகராட்சியில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) கோரியுள்ளது.
இது தொடர்பாக உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் எம்.அசோகனுக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஈட்டி விடுப்பு ஒப்படைப்பு ஊதியம், அகவிலைப்படி உயர்வு ஊதியம் பல மாதங்களாக வழங்கப்படவில்லை. மேலும் கடந்த காலங்களில் தையல் கூலி ஆண் தொழிலாளர்களுக்கு தலா ரூ.400 வீதமும், பெண் தொழிலாளர்களுக்கு தலா ரூ.80 வீதமும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதைக் குறைத்து ஆண்களுக்கு ரூ.200, பெண்களுக்கு ரூ.40 என வழங்கியுள்ளனர்.
ஈட்டிய விடுப்பு ஊதியம், அகவிலைப்படி ஊதியம் இரண்டையும் கணக்கிட்டு வழங்குவதற்காக ஒவ்வொரு துப்புரவுத் தொழிலாளியிடமும் ரூ.500 முதல் ரூ.1000 வரை பெறப்பட்டுள்ளது மிகவும் முறையற்ற செயலாகும். இந்நிலையில் கடந்த ஏப்ரல் முதல் இந்த நிலுவைத் தொகை வழங்கப்படாமல் காலதாமதம் செய்யப்படுகிறது.
எனவே துப்புரவு தொழிலாளர்களுக்கு நியாயமாக வழங்க வேண்டிய இந்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும், இத்துடன் அகவிலைப்படி உயர்வுகளை முறையாக கணக்கிட்டு நிலுவைத் தொகையுடன் சேர்த்து வழங்க வேண்டும், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு தையல் கூலியை இன்றைய நிலைமைக்கு ஏற்ப உயர்த்தி வழங்கிட வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் சிஐடியு வலியுறுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை ...
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என முஸ்லிம் லீக...
-
திருச்சி 14.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியி ; ல் டாக்டர் . அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு அரிஸ்டோ ரவுண...
-
திருச்சி 11.12.15 திருச்சி உங்களுடன் அமைப்பு சார்பாக இன்று ஊர்காவல் படை ரோட்டரி இன்னர்வீல் லயன்எக்ஸ்னோரா தமிழ்நாடு வியாபாரிகள் சங...
-
வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பல்வேறு பகுதியில் பெய்து வருகிறது கடந்த 23.11.2015 அன்று பெய்த கனமழையின் காரணமாக தூத்து...
-
கத்தி படத்தின் பாடல்கள் செப்டம்பர் மாதம் வெளிவருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், தற்போது படத்தின் பாடல்கள் குறித்து தனுஷ் ஒரு ...
-
சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழா சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். வுளமான மண் இருந்தால் தான் நிலையான ம...
-
நடிகர் மனோபாலா தயாரிப்பில், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிட உள்ள படம் சதுரங்க வேட்டை. இப்படத்தின் டிரைலரை இளையதளபதி வி...
0 comments:
Post a Comment