Friday, October 17, 2014
திருப்பூர் மாநகராட்சியில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) கோரியுள்ளது.
இது தொடர்பாக உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் எம்.அசோகனுக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஈட்டி விடுப்பு ஒப்படைப்பு ஊதியம், அகவிலைப்படி உயர்வு ஊதியம் பல மாதங்களாக வழங்கப்படவில்லை. மேலும் கடந்த காலங்களில் தையல் கூலி ஆண் தொழிலாளர்களுக்கு தலா ரூ.400 வீதமும், பெண் தொழிலாளர்களுக்கு தலா ரூ.80 வீதமும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதைக் குறைத்து ஆண்களுக்கு ரூ.200, பெண்களுக்கு ரூ.40 என வழங்கியுள்ளனர்.
ஈட்டிய விடுப்பு ஊதியம், அகவிலைப்படி ஊதியம் இரண்டையும் கணக்கிட்டு வழங்குவதற்காக ஒவ்வொரு துப்புரவுத் தொழிலாளியிடமும் ரூ.500 முதல் ரூ.1000 வரை பெறப்பட்டுள்ளது மிகவும் முறையற்ற செயலாகும். இந்நிலையில் கடந்த ஏப்ரல் முதல் இந்த நிலுவைத் தொகை வழங்கப்படாமல் காலதாமதம் செய்யப்படுகிறது.
எனவே துப்புரவு தொழிலாளர்களுக்கு நியாயமாக வழங்க வேண்டிய இந்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும், இத்துடன் அகவிலைப்படி உயர்வுகளை முறையாக கணக்கிட்டு நிலுவைத் தொகையுடன் சேர்த்து வழங்க வேண்டும், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு தையல் கூலியை இன்றைய நிலைமைக்கு ஏற்ப உயர்த்தி வழங்கிட வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் சிஐடியு வலியுறுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...
-
திருச்சி மாவட்ட ஆதிசைவர் நலச்சங்கம், அகில பாரத துறவிகள் சங்கம் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று திருச்சி சுப்...

0 comments:
Post a Comment