Friday, October 31, 2014
மதுரை மாவட்ட கட்டுமான மற்றும் அமைப்புசாரா
தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு உதவிகள் வழங்கும் விழா மதுரையில்
நடைபெற்றது.தொழிலாளர் நலத்துறை ஆணையர் ராதாகிருஷ்ண பாண்டியன் தலைமை
தாங்கினார். இணை ஆணையர் ராஜா முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர்
செல்லூர்ராஜூ கலந்து கொண்டு வாரிய தொழிலாளர்கள் 1594 பேருக்கு ரூ.43 லட்சம்
மதிப்பிலான நிதி உதவிகளை வழங்கி பேசிய போது ,மதுரை மாவட்டத்தில்
அமைப்புசாரா வாரிய உறுப்பினர்களாக 3 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். அதனை 5
லட்சமாக மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவது
பாராட்டுக்குரியது. உழைப்பவரே உயர்ந்தவர் என்ற லட்சியத்தை கொண்டது
அ.தி.மு.க. இயக்கம்.புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், மக்களின் முதல்வர்
அம்மாவும் தொழிலாளர்களை தங்கள் வீட்டு பிள்ளைகளாக பாவித்து பல்வேறு
நலத்திட்டங்களை தந்துள்ளனர். தொழிலாளியின் வியர்வை காயும் முன், ஊதியம்
கொடுக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர் மக்களின் முதல்வர்
அம்மா.தொழிலாளர்களின் குழந்தைகள் சமுதாயத்தில் உயர்ந்த இடத்திற்கு வர
வேண்டும் என்ற எண்ணத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், மக்களின் முதல்வர்
அம்மாவும் திட்டங்களை தந்திருக்கிறார்கள்.தொழிலாளர் கள் தங்குவதற்காக
சென்னையில் ஜீவா இல்லம் அமைத்தவர் எம்.ஜி.ஆர். போக்குவரத்து
தொழிலாளர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து தந்தவர் அம்மா. அமைப்பு சாரா நல
வாரியத்தில் கட்டிட தொழிலாளர்களையும் சேர்த்து சலுகைகள் வழங்கியவர் அம்மா.
கருணை உள்ளம் கொண்ட அம்மா, சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தொழிலாளிகளின்
தலை எழுத்தையே மாற்றி காட்டினார்.தொழிலாளர் வர்க்கத்திற்கு வரலாற்று
சிறப்புமிக்க திட்டங்களை, சலுகைளை வாரி வழங்கியவர் அம்மா. இதை தொழிலாளர்கள்
ஒரு போதும் மறக்கக்கூடாது.தொழிலாளி இறந்தால் குடும்பத்திற்கு வழங்கப்படும்
நிவாரணத்தொகை ரூ.1 லட்சம் என்று இருந்ததை ரூ.5 லட்சமாக உயர்த்தினார்.
அப்படிப்பட்ட மக்களின் முதல்வர் அம்மாவுக்கு தொழிலாளர்கள் அரணாக இருக்க
வேண்டும்.சூழ்ச்சியாளர்களால் அம்மாவுக்கு சோதனை ஏற்பட்டபோது தமிழகமே
கொதித்தெழுந்தது. அம்மா விடுதலை ஆக வேண்டும் என்று அவரவர் தெய்வங்களை
வழிபாடு செய்தனர். மக்களின் பிரார்த்தனை பலித்தது. அதுபோல அவருக்கு எதிரான
அநீதியை விரைவில் முறியடிப்பார். மீண்டும் தமிழகத்தின் நிரந்தர
முதல்–அமைச்சராக வருவார். தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு
மக்களுக்கும் திட்டங்களை அள்ளி தருவார்.என உரையாற்றினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment