Friday, November 21, 2014
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு எரிசாராயம் கடத்திய வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் உத்தரவிட்டார்.இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் 30–ந் தேதி கேரளாவுக்கு எரிசாராயம் கடத்திச்செல்வதாக குடிமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து போலீசார் அதிரடி சோதனை நடத்தி 175 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்ததுடன், இதுதொடர்பாக உடுமலை வீதம்பட்டியை சேர்ந்த ஜோதிமணி(வயது 45), இளங்கோவன்(33), ராமசந்திராபுரம் பகுதியை சேர்ந்த அருள்பிரகாசம்(43) ஆகியோரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் இதுகுறித்து குடிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் ஏற்கனவே எரிசாராயம் பதுக்கியது சம்பந்தமாக வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
எனவே ஜோதிமணி, இளங்கோவன், அருள்பிரகாசம் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார் சிங் ஆலோசனையின் பேரில் குடிமங்கலம் போலீசார் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.
அதன்பேரில் அவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கோவை சிறையில் உள்ள 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான ஆணையை குடிமங்கலம் போலீசார் வழங்கினார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
0 comments:
Post a Comment