Friday, November 21, 2014
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு எரிசாராயம் கடத்திய வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் உத்தரவிட்டார்.இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் 30–ந் தேதி கேரளாவுக்கு எரிசாராயம் கடத்திச்செல்வதாக குடிமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து போலீசார் அதிரடி சோதனை நடத்தி 175 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்ததுடன், இதுதொடர்பாக உடுமலை வீதம்பட்டியை சேர்ந்த ஜோதிமணி(வயது 45), இளங்கோவன்(33), ராமசந்திராபுரம் பகுதியை சேர்ந்த அருள்பிரகாசம்(43) ஆகியோரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் இதுகுறித்து குடிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் ஏற்கனவே எரிசாராயம் பதுக்கியது சம்பந்தமாக வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
எனவே ஜோதிமணி, இளங்கோவன், அருள்பிரகாசம் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார் சிங் ஆலோசனையின் பேரில் குடிமங்கலம் போலீசார் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.
அதன்பேரில் அவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கோவை சிறையில் உள்ள 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான ஆணையை குடிமங்கலம் போலீசார் வழங்கினார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment