Friday, November 21, 2014
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு எரிசாராயம் கடத்திய வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் உத்தரவிட்டார்.இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் 30–ந் தேதி கேரளாவுக்கு எரிசாராயம் கடத்திச்செல்வதாக குடிமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து போலீசார் அதிரடி சோதனை நடத்தி 175 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்ததுடன், இதுதொடர்பாக உடுமலை வீதம்பட்டியை சேர்ந்த ஜோதிமணி(வயது 45), இளங்கோவன்(33), ராமசந்திராபுரம் பகுதியை சேர்ந்த அருள்பிரகாசம்(43) ஆகியோரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் இதுகுறித்து குடிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் ஏற்கனவே எரிசாராயம் பதுக்கியது சம்பந்தமாக வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
எனவே ஜோதிமணி, இளங்கோவன், அருள்பிரகாசம் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார் சிங் ஆலோசனையின் பேரில் குடிமங்கலம் போலீசார் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.
அதன்பேரில் அவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கோவை சிறையில் உள்ள 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான ஆணையை குடிமங்கலம் போலீசார் வழங்கினார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
கோவை: கோவையில் வாக்களர்களுக்கு பணம் தந்த கட்சித்தொண்டருக்கு அடி உதை கொடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கவுண்டம்பாளையத்தில் பணம் தந்...
-
வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ, ஆர்.காந்தி, ராணிப்பேட்டையில் வசித்து வருகிறார். இவருக்கு உதவியாளராக ராணிப்பேட்டை...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...

0 comments:
Post a Comment